Thursday, 21 July 2016



اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

للّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி

எங்களின் இரட்சகனே வானங்களையும்,பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை
.
எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் !நான் அறிய எப்பொருளையும் உனக்கு இணை யாக்குவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்

நான் அறியாது செய்தவற்றிக்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்

என் உறவை அறுத்துவிட்ட உறவினர் யாராவது என் மீது கெட்ட துஆ செய்வதை விட்டும் காவல் தேடுகிறேன்
,
வயிற்றால் ஊர்பவை ,இரு கால்களால் நடப்பவை,நான்கு கால்காளால் நடப்பவை ஆகியவற்றின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் ! சூழ்ச்சிக்கார நண்பனை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் அவனது இரண்டு கண்களோ என்னை சாதாரணமாக பார்க்கின்றன,ஆனால் அவன் உள்ளமோ என்னை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது அவன் என்னிடம் நல்லதைக் கண்டால் புதைத்து விடுகிறான் ,என்னிடம் தவறைக் கண்டாலோ அதை பரப்புகின்றான் இத்தகைய நண்பனைவிட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்

யா அல்லாஹ் !குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கெட்ட உறவினர்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்

யா அல்லாஹ் !எங்களை வழி தவற வைக்கும் அறிஞர்களை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்

,எங்களை பிளவு படுத்தும் அரசியல்
தலைவர்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்

கெட்ட அடுத்த வீட்டுக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்

யா அல்லாஹ் !கடுமையான வறுமையை விட்டும் ,அதிகம் தேவை
நிறைந்த வாழ்க்கையை விட்டும்,காவல் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் !இப்லீசை விட்டும் அவனது படைகளை விட்டும் பாது காவல் தேடுகிறேன்

.யா அல்லாஹ் !பெண்களின் சோதனைகளை விட்டும் காவல் தேடுகிறேன்

ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நஞ்சுள்ள ஒவ்வொரு ஜந்துகளை விட்டும், கெட்ட எண்ணமுடன் தீண்டும் ஒவ்வொரு பார்வையை விட்டும் உன்னுடைய பூரண வார்த்தைகளை கொண்டு பாதுகாவல்தேடுகிறேன்

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.

இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ் !எங்களின் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எவற்றை எல்லாம் விட்டும் பாதுகாவல் தேடினார்களோ அவற்றை எல்லாம் விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்ஆமீன்
யா ரப்! என்னுடைய பலவீன மான நிமிடத்தில் என் மீது கருணை காட்டுவாயாக!
என்னுடைய ஷைத்தானை விட்டும் என் நப்ஸை விட்டும் என்னை தூரமாக்குவாயாக!
என்னுடைய அறிவிற்கும் என் உள்ளத்திற்கும் நேர்வழி காட்டுவாயாக! என் பாவங்களையும் என் நிராசைகளையும் மன்னிப்பாயாக!


அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.

யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்! நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே! நீ அதை வாழ செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.

யா அல்லாஹ்! இல்மால் எனக்கு உதவி செய்வாயாக!. சகிப்புத்தன்மையால் எனக்கு அழகை கொடுப்பாயாக!. தக்வாவால் எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை எனக்கு அலங்காரமாக அளிப்பாயாக!

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன். நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக! அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!

அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக! எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!

என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களைக் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளைமன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

ஆமீன்


யா அல்லாஹ் !உன்னுடைய பெயரால் இந்த நாளைத் துவக்குகிறோம்
உன்னுடைய ரஹ்மத்தை எதிர்பார்த்தவர்களாக,

உன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தவர்களாக

,எங்களின் முயற்சி சக்தியிலிருந்து விலகி உன்

சக்தியின் பால் எங்கள் காரியங்களை ஒப்படைத்து இன்றைய நாளின் பணிகளைத் துவக்குகிறோம்

இன்றைய நாளின் தொழுகை களை குறிப்பிட்ட வேளையில் தொழுபவர்களாக
,பாவங்களை விட்டும் விலகியவர்களாக
,யாருக்கும் எத்தீ ங்கும் செய்யாதவர்களாக
பிறரின் தீங்கிலி ருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக

எங்களுக்குத் தேவையான ஹலாலான ரிஜ்க்கைப் பெற்றவர்களாக ஆக்குவாயாக !ஆமீன்


யா அல்லாஹ்!என் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவாயாக!

மனிதன் எனும் முறையில் நான் செய்யும் தவற்றால் உன்னை வணங்குவதை விட்டும் என்னை தடுத்துவிடாதே!

கண்ணியமானவனே! எனக்கு கண்ணியத்தைக் கொடு! பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத மன நிலையைக் கொடு!

நீ விதித்திருப்பதில் பரக்கத் செய்! ! நீ அருளியதைக் கொண்டு போதும் எனும் மனப்பான்மையை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொடு!

என் மனதில் ஏற்படும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து எனக்கு பாதுகாப்பு கொடு

ஆமீன்


وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا ﴿17:80﴾
17:80.
"என் ரப்பே! உண்மை நுழையும் வழியே
என்னையும் நுழைய வைப்பாயாக! எவ்வழியே உண்மை வெளியேறி விடுமோ அவ்வழியே என்னையும் வெளியேற்றி விடுவாயாக! ! எனக்கு உண்மையை நிலை நாட்ட உன் பக்கமிருந்து உதவி செய்யும் சகதியையும் கொடுப்பாயாக!

என் ரப்பே! மக்கள் கூடுகின்ற இடமானாலும், நட்பு வட்டமானாலும, இயக்கங்களானாலும், தொழில்,வியாபாரமானலும் பேஸ் புக் . இன்டர்நெட் போன்ற இணைய தளங்களானாலும் எங்கே உண்மையும்,நேர்மையும், உன்னுடைய திருப் பொருத்தமும் இருக்கிறதோ அங்கே என்னை நுழை ய வைப்பாயாக! எங்கிருந்து உண்மையும் நேர்மையும் நன்மையும் வெளியேறிவிடுகின்றதோ அந்த இடங்களிலிருந்து என்னையும் வெளியேற்றி விடுவாயாக !

ஆமீன்

அல்ஹம்துல்லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா மா அமாதன வ இலைஹிந்நுன்னுஷூர்

யா அல்லாஹ் !மனதை ஊடுறுவிப்பார்க்கும் சக்தியுடைவனே! முடியாததை முடித்துக்காட்டும் வல்லமை கொண்டவனே! உன்னையே நம்புகிறேன்

உன்னிட த்திலேயே உதவி கேட்கிறேன். நீ நிசசயம் செய்வாய் என ஆதரவு வைக்கிறேன் .
ஆனால் என ரப்பே! என் மனதை வருத்திக்கொண்ருக்குக்கும்
கவலைகளை ஷைத்தான் பெரிதாக்கி உன் மீது நான்வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வைக்க முயற்சிக்கிறான்.
அந்த சைத்தா னிடமிருந்து என்னைக் காப்பாற்று

!என நப்ஸின் பக்கம் என்னை ஒரு நிமிடத்திற்கு கூட தள்ளி விடாதே! என கவலையை ப் போக்குஇந்த உலக கவலையை பெரும் கவலையாக ஆக்கிவிடாதே

மறுமையைப் பற்றிய கவலையை என் மனதில் உண்டாக்கு !அதற்காக அமல்கள் செய்யும் பாக்கியத்தைக் கொடு!

ரப்பனா ஆத்தினா FIத்துன்யா ஹசனா வ FIல் ஆகிரத்தி ஹசனா வகி னா அதாBAந நார்

ஆமீன்

அல்ஹம்துலில்லாஹ் யா அல்லாஹ்!
இவ்வுலக கவலையை பெரும் கவலையாகஆக்காதே! தொழுகை மூலமாகவும் பொறுமையாலும் உன்னிடம் உதவி கேட்கும் மனதைக் கொடு
அல்லாஹ்!என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக!பூமியின் உள்ளே இருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக!தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டுவருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக!

யா அல்லாஹ் என்றென்றும் உன்னை வழிபடும் அடியானாக என... See more

يارب لي حاجة وإن كان استحالها علي عبادك فلي يقين انك على كل شيء قدير فارزقني يارب من حيث لا احتسب واغنني بحلالك عن حرامك وبفضلك عمن سواك.
என்னைப்படைத்த என் ரப்பே !
எனக்கு ஒரு தேவை இருக்கிறது,மனிதர்களைப் பொறுத்தவரை அது முடியாத காரியம், ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்தவன்
என் ரப்பே!நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு ரிஜ்க் அளிப்பாயாக! உன்னுடைய ஹலாலான வற்றின் மூலம் ஹராமானவை விட்டும் என்னை தேவை யற்ற வனாக ஆக்குவாயாக !
உன்னுடைய கருணையினால் உன்னை அல்லாதவர்களிடம் என்னை தேவையற்ற வானாக ஆக்குவாயாக !
ஆமீன்

என்னைப் படைத்தவனே !எங்களின் சிரமங்களை இலகுவானதாக மாற்றி அமைப்பாயாக !எங்கள் உள்ளங்களை எவையெல்லாம்நெருக்கடிக்குள்ளாக்கு கிறதோ அவற்றிலிருந்து எங்களை விடுவிப்பாயாக!
நாங்கள் எதிர்பாராத வகையில் எங்களுக்கு ரிஜ்க் அளிப்பாயாக
ஆமீன்


துன்பம் வந்த வேளையில் சொல்லுங்கள் :இன்னல்லில்லாஹ்

عن ام سلمه رضي الله عنها قالت : سمعتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : « مَا مِنْ عبدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ ، فيقولُ : إِنَّا للَّهِ وَإِنَّا إِليهِ رَاجِعُونَ : اللَّهمَّ أجرني في مُصِيبَتي ، وَاخْلُف لي خَيْراً مِنْهَا، إِلاَّ أَجَرَهُ اللَّهُ تعَالى في مُصِيبتِهِ وَأَخْلَف له خَيْراً مِنْهَا . قالت : فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَة ، قلتُ كما أَمَرني رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأَخْلَفَ اللَّهُ لي خَيْراً منْهُ رسولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم . رواه مسلم .
பெருமானார் (ஸல்) அவர்களை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட நாற்பது பேர்களில் இருவர் உம்மு சல்மா(ரலி)அவர்களும் அவர் கணவர் அபூசல்மா(ரலி )வும்

.பத்ரு போரில் அபூ சல்மா அவர்கள் ஷஹிதானர்கள்.மக்காஹ் வாசியான உம்மு சல்மாவுக்கு மதினாவில் அவர்களுடைய மூன்று குழந்தைகளை தவிர வேறு சொந்தம் இல்லை.

இந்நிலையில் தான் நேசித்த கணவர் மறைந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது
“எந்த ஓர் அடியான் தனக்கு துன்பம் வந்த நேரத்தில் இன்னல்லில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்லி விட்டு யா அல்லாஹ் இந்த துன்பத்திற்கு எனக்கு நற்கூலி கொடுப்பாயாக! அதற்கு பதிலாக சிறந்த ஒன்றை கொடுப்பாயாக! என்று துவா செய்தால் அல்லாஹ் அந்த துன்பத்திற்கு நற்கூலி கொடுப்பதுடன் அதற்கு பகரமாக சிறந்த ஒன்றை கொடுப்பான்”.

உம்மு சல்மா சொல்கிறார்கள் அபூ சல்மா மரணித்த பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்ன அறவுரையை பின் பற்றி துவா செய்தேன்.எல்லா வகையிலும் என் கணவர் அபூ சல்மாவை விட சிறந்தவரான அண்ணல் நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்கு கணவராக தந்தான்.

எனவே உண்மையான முஸ்லிமான நாம் மேற்கண்ட நபிமொழியின் அறவுரைக்கு ஏற்ப எந்த துன்பம் வந்தாலும் நம்பிக்கையுடன் இன்னால்லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் சொல்வோம் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

T


அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் !

யா அல்லாஹ!எங்களின் பலஹீனத்தை உன்னிடத்தில் முறையிடுகிறோம்
.எங்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் எங்களின் திறமைக்குறைவைப்பற்றி உன்னிடம் முறையிடுகிறோம்.
எங்களைக் காப்பாற்று.
எங்களை மன்னித்துவிடு.எங்களின் மீது கருணை காட்டு.
எங்கள் காரியங்களை உன்னை அஞ்சாத எங்கள் மீது இரக்கப்படாதவன் பொறுப்பில் விட்டு விடாதே
எங்களில் உள்ள சில அறிவிலிகள் செய்யும் செயல்களுக்கு எங்களைத் தண்டித்துவிடாதே!
எங்களுக்கு என்றும் துணை நின்று எங்களின் ஈரு உலக காரியங்களுக்கும் வழிகாட்டுவாயாக நீயே எங்களின் பாதுகாவலன்
ஆமீன்


அல்ஹம்து லில்லாஹி அஹ்யானா பஅத மாஅமாதான வ இலைஹில் நுஷூர
அல்லாஹும்மஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யஅயித்னா முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் அலைஹி
ரப்பி குர் ஆனில் நீகற்றுதந்த துஆ விலிருந்து கேட்கிறோம்

رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ

ஷைத்தான் எங்கள் உள்ளங்களில் ஊசலாட்டத்தை உறுவாக்குவதிலிருந்தும் அவன் எங்கள் உள்ளங்களில் இடம் பிடிப்பதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
. எங்கள் மீதும் எங்கள் பெற்றோர்கள் மீதும் நீ அளித்த நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்தவும் நீ திருப்தி அடையும் நல்ல அமல்கள் செய்யவும் உன் கருணையினால் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக
யா அர்ஹமர் ராஹிமீன் இன்றைய நாள் எங்களின் இம்மைக் கும் மறுமைக்கும் பலனுள்ள நாளாக ஆக்குவாயாக"
ஆமீன்்


எங்களைப் படைத்த கருணையாளனே உன் ரஹ்மத்தால் மாலை அடைந்தோம் இன்று நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக!

நாங்கள் செய்த நல்அமல்களை ஏற்றுக்கொள்வாயாக!நாளை பொழுதை உன்னிடம் ஒப்படைத்து விட்டோம்

.உன்னுடைய பாதுகாவலில் உறங்கச் செல்கிறோம்

அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
அஸ்தஃபிருல்லாஹ்

அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா


أجمَل مَا يُقال كُل صَباح ؛
رَبي أنت المُيسر وَأنت المُسَهل ، سَهل أمري وَحقَق مَطلبي ، وَسَخر لِي مَا هُوَ خَيرٌ لِي
என் ரப்பே!
நீ தான் சிரமங்களை லேசாக்குபவன்,
நீ தான் காரியங்களை இலகுவாக்குபவன்.
என்னுடைய காரியங்களை இலேசாக்குவாயாக!
என்னுடைய நோக்கங்களை உறுதியாக்குவாயாக!
எனக்கு எவை நன்மைபயக்குமோ
அதை எனக்கு வசப்படுத்தி கொடுப்பாயாக!
ஆமீன்