Monday, 11 January 2016

இன்றைய நாளை ஆபத்தில்லாத சிறந்த நாளாக ஆக்கி தந்த அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்!
சூரியன் மறைந்ததைப் போல எங்கள் உள்ளத்தின் கவலைகளை மறைய செய்வாயாக!
நாளை காலை நீ நாடினால் சூரியன் உதிப்பதைப் போல எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை உதிக்க செய்வாயாக!
எங்களின் காரியங்களை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். அவைகளை திட்டமிட்டு நீ நிறைவேற்றுவாயாக!
ஏனென்றால் நீ திட்டமிடுவதில் சிறந்தவனாக இருக்கின்றாய்!
யா அல்லாஹ்!இந்த இரவின் தீங்கை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்!
ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் என்று நீ பாராட்டியவர்களின் கூட்டத்தில் எங்களை சேர்ப்பாயாக!
தூங்கும் முன் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவை நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.
“அல்லாஹும்ம ஃபவ்வல்து அம்ரி இலைக்க வஅஸ்லம்த்து நஃப்ஸி இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க வஆமன்த்து பிகிதாபிக அல்லதி அன்ஜல்த்த வநபியிக்கல்லதி அர்ஸல்த்த”
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா

Sunday, 10 January 2016


அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா வஅமாத்தனா வஇலைஹிந் நுஷுர்
மீண்டும் எங்களுக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வே!, உனக்கே எல்லாப் புகழும்.

கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என உனது தூதர் தனது நண்பரிடம் சொன்னதாக அருள்மறையில் கூறியுள்ளாய். அதனை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம்.

நீ எங்களுடன் இருக்கின்றாய் என்ற நம்பிக்கைத் தான் எங்களை வாழ வைக்கின்றது.அந்த நம்பிக்கையை உறுதிப் படுத்துவாயாக!

துன்யாவில் ஃபித்னாக்களும் ஃபஸாதுகளும் எங்கள் ஈமானை பலகீனமாக்கி தடுமாற வைக்கின்றன.
உன் அருள் இல்லாவிட்டால் எப்பொழுதோ நாங்கள் ஈமானை நழுவ விட்டிருப்போம்.

ஒவ்வொரு நேர பாங்கு அழைப்பும் எங்கள் ஈமானை புதுப்பிக்கிறது

என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் தொழுபவர்களாக ஆக்குவாயாக!
இந்த உலகத்தின் ஃபித்னாவில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக!

தீய நண்பர்களை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய அண்டை வீட்டாரை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய ஆட்சியாளரை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
தீய அதிகாரிகளை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!
இந்த உலகத்தின் வாழ்வாதரங்களுக்காக மறுமை வாழ்வை மறந்து வழி தவறி செல்லாமல் எங்களை பாதுகாப்பாயாக!
ஒரு நிமிடம் கூட எங்கள் நஃப்ஸின் பக்கம் எங்களைத் தள்ளி விடாதே!
எப்பொழுதும் எங்களுடன் இருந்து நேரிய பாதையில் எங்களை செலுத்துவாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய ரஸூலுடைய கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு மரணிக்கின்ற பொழுது கூட உனக்கு கட்டுப்பட்டவர்களாகவே எங்களை மரணிக்க செய்வாயாக!
இன்றைய நாளை எங்களுக்கு பலன் உள்ளதாக ஆக்குவாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

Wednesday, 6 January 2016




நான் மிக அருகே இருக்கிறேன் என சொல்லும் என் இரட்சகனே!

என் உள்ளத்தின் முனங்கல் சத்தத்தை செவிமெடுப்பாயாக!

அதை கேட்கின்ற ஆற்றல் உன்னையன்றி யாரிடமுமில்லை.

என் உள்ளத்தின் கனவுகளை உண்மையாக்குவாயாக!

நீ விதித்ததைக் கொண்டு போதுமாக்கும் மன நிலையை ஏற்படுத்துவாயாக!
என் எதிரிகளும்,என் மேல் பொறாமை கொண்டோரும் என்னை ஏளனம் செய்யும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே என் ரப்பே!
உன்னை மட்டுமே வணங்குகிறேன்
உன்னிடம் மட்டுமே கையேந்தி கேட்கிறேன்

நீயே எனக்கு பாதுகாவலன்.
எல்லாப் புகழும்,நன்றியும் உனக்கே

லகல் ஹம்து வலகஷ்ஷுக்ர் யா அல்லாஹ்

ஆமீன்