Sunday, 30 April 2017

01/05/2017

‏اللهم احفظنا من شتات الامر ومس الضر وضيق الصدر وعذاب القبر وحلول الفقر وتقلب الدهر والعسر بعد اليسر ... اللهم امين

யா அல்லாஹ்!  எங்களின் காரியங்கள் சிதறுண்டு போவதிலிருந்து காப்பாயாக!
துன்பங்கள் தீண்டுவதிலிருந்தும்,மன அழுத்தத்திலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும்,வறுமை இறங்குவதிலிருந்தும், காலங்கள் மாறுவதிலிருந்தும், மகிழ்ச்சிக்குப் பின் சிரமங்கள் ஏற்படுவதிலிருந்தும் எங்களைக் காப்பாயாக!

!உன்னுடய கருணையின் வாசல்களை எங்களுக்குத் திறந்து விடுவாயாக!
உன் நேர்வழியின் பாதையை எங்களுக்கு காண்பித்து அதன் வழி நடத்தாட்டு்வாயாக
!எங்களுக்குள் இருந்து வழி கெடுக்கும் ஷைத்தானுக்கு எதிராகவும் எங்களுக்கு வெளியே இருந்து எங்களையும் எங்களின் உயிரினும் மேலான இஸலாம் மார்கத்தையும் அழிக்க நினைக்கும் மனித ஷைத்தான்களுக்கு எதிராகவும்
போராடும் மனவலிமையை தந்தருள்வாயாக!ஆமீன்

Thursday, 27 April 2017

நீ திருப்தி கொள்ளும் பாதையில்

الحمد لله  الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ 
اللهم استعملني لما يرضيك
اللهم اجعل سمعي لا يسمع إلا ما يرضيك
اللهم اجعل بصري لا يرى إلا ما يرضيك
اللهم اجعل يدي لا تبطش إلا بما يرضيك
اللهم اجعل رجلي لا تمشي إلا لما يرضيك
اللهم اجعل عقلي لا يفكر إلا فيما يرضيك
اللهم اجعل قلبي لا ينبض إلا بما يرضيك
اللهم اجعل لساني لا ينطق إلا بما يرضيك
اللهم اجعلني وأهلي وأصدقائي وإخواني والمسلمين والمسلمات لما يرضيك وبما يرضيك وفيما يرضيك
اللهم ءامين

யா அல்லாஹ் நான் செய்த அனைத்து பாவங்களிலிருந்து தவ்பா செய்கிறேன்.
என்னுடைய சிறிய,பெரிய, பாவங்களையும்,தெரிந்தும்,தெரியாமாலும் செய்த அனைத்து தவறுகளையும் மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
நீ திருப்திகொள்ளும் நல்லமல்களுக்கு என்னை பயன்படுத்துவாயாக!
நீ திருப்திப்படுபவைகளை தவிர வேறு எதனையும் கேட்காமல் என் செவியை ஆக்குவாயாக!

யா அல்லாஹ் நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறு எதையும்
பார்க்காமல் என் கண்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறு எதனையும் பிடிக்காமல் என் கரங்களை
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்ளும்
பாதையிலேயே தவிர வேறு பாதையில் செல்லாமல் என் கால்களை ஆக்குவாயாக!
நீ திருப்தி கொள்ளும் விஷயங்களைத் தவிர வேறெதனையும் சிந்திக்காமல் என் அறிவை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!நீ திருப்தி கொள்ளுபவைகளுக்காகவே தவிர
வேறெதற்கும் துடிக்காமல் என் உள்ளத்தை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! நீ திருப்தி கொள்பவைகளைத் தவிர வேறெதனையும் பேசாமல் என் நாவை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! என்னையையும்,என் குடும்பத்தாரையும்,என் நண்பர்களையும்,
என் சகோதரர்களையும்,அனைத்து முஸ்லிம்களையும் நீ திருப்தியடையும் வழியில் நடத்தாட்டுவாயாக!
ஆமீன்

ஷஃபான் மாத முதல் பிறை துஆ

பரக்கத்தான ஷஃபான் மாத முதல் ஜும்மா இரவில் உன்னிடம் கையேந்திக் கேட்கிறோம்
யா அல்லாஹ்!யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!
உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!
அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்.
அப் பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்.
அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட  வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்.
அப்பார்வையினால்  எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்.
அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்.
அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்.
அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்.
அப்பார்வையினால்  எங்கள் இம்மை,மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்.
ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

Friday, 21 April 2017

22/04/2017

يارب ياعالم بحالي اليك اشتكى مني ومن ضعفي فأعني على نفسي وقوني بك واعذني من شر خلقك وكيدهم وارزقني سعادة اضعاف ما اتمنى واحبتي

யா ரப்! என்னுடைய நிலைமையை அறிந்தவனே!
உன்னிடமே என்னைப்
பற்றி,என்னுடைய பலவீனத்தைப் பற்றி
முறையிடுகிறேன்.
என்னுடைய நப்ஸிற்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!
உன்னைக் கொண்டு என்னை உறுதிப் படுத்துவாயாக!
உன்னுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்தும்,அவைகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக!

என் இரட்சகனே!
நான் கற்பனை செய்வதை விட என் நேசத்திற்குறியவர்கள் விரும்புவதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்கும் அவர்களுக்கும் அருள்வாயாக"
எங்களின் பாவங்களையும் ,தவறுகளையும் மன்னித்து அவைகளை எங்களின் பதிவேட்டிலிருந்து நீக்குவாயாக!
  எங்களின் மீது கருணைகாட்டுவாயாக
யா ஹய்யு யா கய்யூம்! அஸ்தஙீசு பிரஹ்மத்திக.
நித்திய ஜீவனே! நிலைத்திருப்பவனே!
உன்னுடைய கருணையை க்கொண்டு உன்னிடம் உதவி தேடுகிறேன்.
ஏங்களின் பிரார்த்தனைகளை,எங்களின் வேண்டுதலை, நிராகரித்து விடாதே!
எங்களின் ரப்பே!
ஆமீன்.

Wednesday, 5 April 2017

06/04/2017 துஆ

யா அல்லாஹ்!உன்னிடம் மன்றாடிக் கேட்கிறேன் நீ ஒருவன் ஏகன் யாரிடமும் எத்தேவையும் இல்லாதவன் நீ யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெற்றெடுக்கப் படவும் இல்லை அத்தகைய என் ரப்பே !என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக!
நீ மன்னிப்பவன்் கருணையாளன்

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
யா அல்லாஹ்!
பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்
உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்து உன்னிடம்
பாதுகாவல் தேடுகிறேன்
நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து
உன்னிடம் பாது காவல் தேடுகிறேன்
நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
கருணையாளனே!
அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!
ஆமீன்