Friday, 18 June 2021

தந்தைக்காக துஆ

ஜும்மா நாளில் மறைந்த தந்தைக்காக துஆ
----------------------------=-============
என் ரப்பே! என் தந்தையின் கப்ரை ஒளிமயமாக்குவாயாக!
அவருடைய பலவீனத்தின் மீது இரக்கம் கொள்வாயாக!

தனிமையை இனிமையாக ஆக்குவாயாக"
அவருடைய கப்ரை அவர்மீது இரக்கம் கொள்ளச் செய்வாயாக!
மண்ணை அவருக்கு இலேசாக்குவாயாக!

யா அல்லாஹ்! துன்பம் தரும் அனைத்திலிருந்தும் அவரை பாதுகாப்பாயாக!

அவருடைய  கப்ரை சொர்க்கப் பூங்காவின் ஒரு பூங்காவாக மாற்றுவாயாக!
எவ்வித கேள்வி கணக்கின்றி அவரை சுவனத்தில் நுழைய வைப்பாயாக!
  உன் கருணையினால் 
யா அர்ஹமர்ராஹிமீன்.
ஆமீன்

Friday, 11 June 2021

துஆ

الحمد لله الذي رد إلي روحي وعافني في جسدي وأذن لي بذكره ))رواه الترمذي عن أبي هريرة

 எனக்கு உயிரை மீட்டுகொடுத்து எனது உடலில் ஆரோக்கியத்தை அளித்து அவனை  திக்ரு செய்ய அனுமதியளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
-----


اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ‏"‏ ‏
.‏اخرجه الترمذي

ஏழு வானங்கள் அவை தம் நிழலிருப்பவைகளின் ரப்பே!

ஏழு பூமிகள் அவை சுமந்திருப்பவற்றின்ரப்பே!

ஷைத்தான்களுடையவும்,அவற்றால் வழிகெடுக்கப்பட்டவர்களின் ரப்பே!

  உன்னுடைய படைப்புகள் அனைத்தினுடைய தீங்கை விட்டும், அவற்றில் ஏதாவது ஒன்று என்மீது 
 அநீதி இழைப்பதை விட்டும் எனக்கு பாதுகாவலானக நீ  இருப்பாயாக!

  உன்னால் பாதுகாக்கப்பட்டவனே, உண்மையில் பாதுகாப்படைந்தவன்.

உனது திருநாமமே பரக்கத் பொருந்தியதாகும்.
உன்னையன்றி  வணக்கத்துக்குறிய வேறு இறைவன் இல்லை.
(திர்மதி)

Saturday, 5 June 2021

அண்ணலாரின் அழகிய துஆக்கள்

#அண்ணல் நபிﷺ அவர்களின் அழகிய பிரார்த்தனைகள் (4)
---------

அல்ஹம்துலில்லாஹ.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா
ரசூலில்லாஹ்

     யாஅல்லாஹ்!நிச்சயமாக நான் மார்க்க காரியங்களில் உறுதியோடிருப்பதையும், நேர்வழியில் முனைப்புடன் இருப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.

    உனது கருணையை உறுதிப்படுத்துபவைகளையும்,
உனது பாவமன்னிப்பின் பால் இழுத்துச் செல்பவைகளையும் உன்னிடம் கேட்கிறேன்.

   உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல், உன்னை வணங்குவதுலே நேர்த்தி, உண்மையே உரைக்கும் நாவு, ஸலாமத்துப் பெற்ற இதயம், செவ்வையான குணம் ஆகியவற்றையும் உன்னிடம் கேட்கிறேன்

    நீ அறிந்த நலன்களை வேண்டுகிறேன். நீ அறிந்த ( பாவங்கள்) அனைத்தை விட்டும் மன்னிப்பு தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைந்தவற்றை மிக அறிபவன்.

யா அல்லாஹ்!எங்களுக்கு அதிகரிசெய் குறைத்துவிடாதே! 
எங்களுக்கு கண்ணியத்தை அளி!எங்களை இழிவு படுத்திவிடாதே!

உன அருளை எங்களுக்கு கொடு தடுத்து விடாதே!்
எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள் ்எங்களுக்கு எதிராக யாரையும் தேர்ந்தெடுத்து விடாதே

எங்களை உன் மீது திருப்தியுள்ளவர்களாகவும நீயும் எங்களின் மீது திருப்தி கொண்டவர்களாகவும்
எங்களை ஆக்குவாயாக!

فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக 
உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101