اللهم إني أسألك في صلاتي ودعائي . بركة تطهر بها قلبي، وتكشف بها كربي ، وتغفر بها ذنبي ، وتصلح بها أمري ، وتغني بها فقري ، وتذهب بها شري
யா அல்லாஹ்! என்னுடைய தொழுகையிலும்,என்னுடையதுஆ விலும்
பரக்கத்தைக் கேட்கிறேன் .
அதன் மூலம் என் உள்ளம் பரிசுத்தமடைய வேண்டும். என்னுடைய துன்பங்கள் நீங்க வேண்டும்,என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,என்னுடைய வறுமை நீக்கப்படவேண்டும்,என்னுடைய காரியங்கள் சீரமைக்கப்படவேண்டும்,
என்னுடைய தீமைகள் போக்கப்படவேண்டும்,
என்னுடைய கவலைகள்,துக்கங்கள் மகிழ்ச்சியாக மாற்றப்படவேண்டும்,
என்னுடை நோய் குணமாக வேண்டும்,
என்னுடைய கடன்கள் நிறைவேறவேண்டும்,
என்னுடைய முகம் பிரகாசமாக வேண்டும்.
யா அல்லாஹ்! யாரஹ்மான்!
என்னுடைய தொழுகை உன்னுடைய பரக்கத்தை கொண்டு வரும் வகையில் முழுமையாக அமைய தவ்பீக் செய்வாயாக!
ஆமீன்
முகநூலில் நான் பதிவு செய்த துஆக்கள். ஒவ்வொரு நாளும் என் மன நிலையை பிரதிபலிக்கும் பிரார்த்தனைகள்
Sunday, 24 September 2017
காலை நேர துஆ
Friday, 15 September 2017
சஹர் நேர துஆ
அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹும்ம லகல் ஹம்து வலக் ஷுக்று
கருணையாளனே !
உன் கருணையினால் அதிகாலை தொழுகையை தொழுதோம்
யா ரப் !எங்கள் அமல்கள் எவ்வளவு குறைபாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்
!நாங்கள் பலவீனமானவர்கள்,நீ கொடுத்த அருட்கொடைகளுக்கு நிகராக எங்களால் வணங்கமுடியாது
நாங்கள் உன்னையே வணங்கிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம்
உன் அருள் இரங்கும் சஹர் நேரத்தில் கேட்கிறோம் எங்கள் துஆ வை ஏற்றுக்கொள்வையா க !
உன் நபி உன்னிடத்தில் எதையெல்லாம் கேட்டார்களோ அவைகளை எங்களுக்கும் கொடுப்பாயாக
எதை எதையெல்லாம் விட்டும் பாதுகாப்பு கேட்டார்களோ அவற்றை எல்லாம் விட்டு எங்களை பாதுகாப்பாயாக
ஏக இறைவா!
வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்
யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே!
என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக!
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
வ ணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை
நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாயகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
யா அல்லாஹ் ! என்னை மன்னித்து விடு!
யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு!
யா அல்லாஹ் !என்னை மன்னிப்பாயாக!
எனக்கு அருள் புரிவாயாக!
எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக!
எனக்கு ரிஜ்க் அளிப்பாயாக!
என்னை உயர்த்துவாயாக!
இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.
என் ரப்பே பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக.
நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து
இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
என் இரட்சகனே!
என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக.
நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.
வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்!
முஸ்லிமான மக்களுக்கு பாது காப்பளிப்பாயாக ! எதிர்படைகளை தோற்கடிப்பாயாக!
இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.
இ றைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
இ றைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக.
நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக.
எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!
இ றைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு!
அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன்.
இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.
எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ கருணை புரிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் கருணை புரிவாயாக!
நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்.
ஆமீன்
Thursday, 14 September 2017
ஜும்மா நாளில் துஆ
அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.
கருணையாளனே! பரக்கத்தான ஜும்மா நாளில் உன்னிடம் கையேந்தி கேட்கிறோம்
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்!
நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே!
நீ அதை வாழச் செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.
யா அல்லாஹ்! நல்லறிவால் எனக்கு உதவி செய்வாயாக!.
சகிப்புத்தன்மையால் எனக்கு அழகை கொடுப்பாயாக!.
தக்வாவால் எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை எனக்கு அலங்காரமாக அளிப்பாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன்.
நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக!
அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!
அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக!
எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!
என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களைக் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளைமன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
ஆமீன்
Monday, 11 September 2017
காலை துஆ
அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.
யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்! நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே! நீ அதை வாழ செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.
யா அல்லாஹ்! இல்மைக் கொண்டு எனக்கு உதவி செய்வாயாக!. சகிப்புத்தன்மையைக் கொண்டு எனக்கு அழகை கொடுப்பாயாக!. தக்வாவைக் கொண்டு எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை கொண்டு எனக்கு அலங்காரம் அளிப்பாயாக!
யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன். நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக! அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!
அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக! எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!
என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
ஆமீன்
அரபா நாள் துஆ
اللهم اجعلنا ممن عفوت عنهم
اللهم اجعلنا ممارضيت عنهم
اللهم اجعلنا مماغفرت لهم وحرمتهم من النار
اللهم يمن كتابي ويسر حسابي
اللهم احسن وقوفي بين يديك
اللهم ارزقنى جنتك
அல்ஹம்துலில்லாஹ்! அருள் இறங்கும் அதிகாலை நேரத்தில் உன்னை வணங்க அருள் புரிந்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் .
யா அல்லாஹ்! நீ மன்னிப்பளித்தவர்களில்
ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! உன் திருப்தியை பெற்றவர்களில் ஒருவனாக என்னையையும்
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! உன் மன்னிப்பைப் பெற்று நரகம் ஹராமாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக
என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! மறுமையில் வலது கையில் குறிப்பேடு அளிக்கப்பட்டு,கேள்விகணக்கும்
லேசாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!மறுமையில் உன் முன்னால் நான் நிற்பதை சிறப்பாக்குவாயாக!!
யா அல்லாஹ்! எனக்கு சொர்க்கத்தை வழங்குவாயாக!
யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் எவரின் முன்பும் என்னைக் கேவலப்படுத்துவிடாதே!
யா அல்லாஹ்! இன்று லட்சக்கணக்கான உன் நல்லடியார்கள் அரபா மைதானத்தில்
கூடி உன் அருளைத் தேடுகிறார்கள்
அவர்களின் துஆக்களை ஏற்றுக் கொள்வாயாக!
வரும் ஆண்டு அரபா நாளில் அந்த மைதானத்தில் உன் பாவமன்னிப்பை தேடுபவர்களில் ஒருவனாக எங்களையையும் ஆக்குவாயாக!
ஆமீன்.
அரபா துஆ
அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹயானா வ இலைஹின் னுஷூர்.
தனது வற்றாக் கருணையினால் எங்களுக்கு உயிர் கொடுத்து உணவும் கொடுத்து அரபா நோன்பு நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்
என் ரப்பே! நான் பலகீனமாக இருக்கிறேன். என்னை பலப்படுத்த உன்னையன்றி யாருமில்லை.
நான் நிராசையுடன் இருந்தாலும் உன் மீதுள்ள என் நம்பிக்கையை நான் இழக்கவில்லை.
நான் பல்வேறு துன்பங்களில் மூழ்கி கிடக்கிறேன். நீ மட்டுமே என்னை காப்பாற்ற முடியும்.
என் ரட்சகனே! பலகீனமான இந்நேரத்தில் என் மீது கருணை கொள்வாயாக.
என்னுடைய ஷைத்தானையும், என்னுடைய நஃப்சையும் என்னை விட்டு தூரமாக்குவாயாக.
என் உள்ளத்திற்கும் என் அறிவிற்கும் நேர்வழி காட்டுவாயாக.
என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக.
யா அல்லாஹ்! நீ இருக்கும் போது நான் யாரிடம் சென்று முறையிடுவேன்.
உன்னுடைய வாசல்கள் மூடப் படாமல் இருக்கும் போது நான் யாருடைய வாசலில் நின்று கண்ணீர் விட்டு அழுவேன்.
வணக்கத்திற்குரியவன் நீ மட்டுமே இருக்கும் போது யாரை நான் அழைப்பேன்.
உன் மீது நான் வைத்திருக்கின்ற ஆதரவு எல்லையற்று இருக்கும் போது நான் யார் மீது ஆதரவு வைப்பேன்.
ரப்பே! உன்னுடைய மன்னிப்பை எனக்கு நிரந்தரமாக்கு.
உன்னுடைய திருப்தியை எனக்கு நிலை நாட்டு.
பாவங்களை எண்ணி கைசேதப்படுபவனாக என்னை ஆக்கு.
யா அல்லாஹ்! என்னுடைய தேவைகளை சிரமமானதாக ஆக்கி விடாதே.
என்னுடைய காரியங்களை பாரமானதாக ஆக்கி விடாதே.
யா அல்லாஹ்! என் ரகசியத்தை வெளிப்படுத்தி விடாதே.
என்னை கேவலப்படுத்தி விடாதே.
யா அல்லாஹ்! நான் பகிரங்கமாக மாறு செய்தால் என்னை மன்னிப்பாயாக.
நான் ரகசியமாக பாவம் செய்தால் அதை மறைத்து விடுவாயாக.
யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தில் முஸிபத்தை ஏற்படுத்தி விடாதே.
இந்த உலக வாழ்க்கையை பெரும் கவலையாக ஆக்கி விடாதே.
யா அல்லாஹ்! என் உடலை சோதனைக்களமாக ஆக்கி விடாதே.
என்னுடைய செல்வத்திலும் என்னுடைய குடும்பத்திலும் சிரமத்தை ஏற்படுத்தி விடாதே.
யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு ஹராமை விட்டும் தேவையற்றவனாக ஆக்குவாயாக.
உன் மேல் உள்ள அச்சத்தைக் கொண்டு உனக்கு மாறு செய்வதை விட்டும் பாதுகாப்பாயாக.
எனக்கு யாராவது தீங்கு இழைக்க நாடினால்,
அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே தடுத்துவிடுவாயாக!
யா அல்லாஹ்
எங்கள் நோய்களை குணப்படுத்துவாயாக!
எங்களில் மறைந்தவர்களில் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய நாளை சிறப்பான நாளாக ஆக்கி அருள்புரிவாயாக!
ஆமீன்.