Tuesday, 12 December 2017

துஆ

يامن اذا دعي اجاب ,ياسريع الحساب  ,ياعظيم الجناب ياكريم ياوهاب . رب لاتحجب دعوتي ولاترد مسألتي ولاتدعني بحسرتي ولاتكلني الى حولي وقوتي ارحم عجزي فقد ضاق صدري وتاه فكري وتحيرت في امري وانت العالم سبحانك بسري وجهري القادر على تفريج كربتي وتييسير عسري اللهم احيينا في الدنيا مؤمنين طائعين وتوفنا مسلمين تائبين

யா அல்லாஹ்! அழைத்தால் பதிலளிப்பவனே!மகத்தானவனே!கேள்விகணக்கினை விரைந்து முடிப்பவனே! சங்கையானவனே!
வாரி வழங்குபவனே!
என்னுடைய அழைப்பைத் தடுத்துவிடாதே! என்னுடைய வேண்டுகோளை நிராகரித்துவிடாதே!
என்னுடைய கைசேதத்திலேயே என்னை விட்டுவிடாதே!
என்னுடைய சக்தியின் பக்கமும்,என்னுடைய திரும்புதல் பக்கமும் என்னை தள்ளிவிட்டுவிடாதே!
என்னுடைய இயலாமையின் மீது இரக்கம் கொள்!
என்னுடைய உள்ளம் நெருக்கடியில் இருக்கிறது.
என்னுடைய சிந்தனை சிதறுண்டு கிடக்கிறது.

என்னுடைய காரியத்தில் தடுமாறிநிற்கின்றேன்.

பரிசுத்தமானவனே!
என்னுடைய இரகசியங்களையும்,வெளிப்படையானவைகளையும் நீ நன்கறிந்தவன்.

என்னுடைய துன்பங்களை நீக்கவும்,என்னுடைய கஷ்டங்களை இலகுவாக்குவும் நீ சக்திவாய்ந்தவன்.

யா அல்லாஹ்!
  இந்த உலகில் உனக்கு கட்டுப்பட்டு வாழுகின்ற முஃமினாக வாழவைப்பாயாக!
பாவங்கள் மன்னிக்கப்பட்ட முஸ்லிமாக எங்களை மரணிக்கச்
செய்வாயாக!
ஆமீன்

Thursday, 16 November 2017

http://www.kulalsalafiyeen.com/vb/showthread.php?t=18814

Friday, 27 October 2017

துஆ

அல்ஹம்துலில்லாஹ் உயிர் கொடுத்து உணவும் கொடுத்து மானத்தை மறைக்க ஆடையையும் கொடுத்த இரட்சகனே!
      லிபாசுத் தக்வா என்ற எங்கள் பாவங்களை தடுக்கும்  தக்வா என்ற ஆடையைத்தருவாயாக!
       உன்னை அன்றி வேறுயாரிடமும்் கை ஏந்தாமல் எங்களைக்காப்பாயாக!
         எங்களின் மனஅழுத்தத்தைப் போக்குவாயாக!
         என்னை படைத்தவனே !என் வாழ்நாளின்   நடந்த முக்கிய நிகழ்வெல்லாம் நீ விதித்த விதியால் என்னை மீறி நடந்தவை கள் தாம்  .அவைகள் அனைத்தும் எனக்கு நன்மையாகவே முடிந்திருக்கிறது
       இப் பொ ழுதும் எனக்கு ஒரு சோதனை வைத்துள்ளாய் ,என ரப்பே!
       அதில் வெற்றியடைய எனக்கு பொறுமையைக் கொடு
என்னை நேரான வழியில் நடத்து   
      வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய நபியுடைய சொல்லுக்கும் அடிபணிந்து  வாழ்ந்து  மரணிக்கும் பொழுதும் அவ்விதமே மரணிக்கும் பாக்கியத்தைத் தருவாயாக!
ஆமீன்

காலை துஆ

அல்ஹம்துலில்லாஹ் உயிர் கொடுத்து உணவும் கொடுத்து மானத்தை மறைக்க ஆடையையும் கொடுத்த இரட்சகனே!
      லிபாசுத் தக்வா என்ற எங்கள் பாவங்களை தடுக்கும்  தக்வா என்ற ஆடையைத்தருவாயாக!
       உன்னை அன்றி வேறுயாரிடமும்் கை ஏந்தாமல் எங்களைக்காப்பாயாக!
         எங்களின் மனஅழுத்தத்தைப் போக்குவாயாக!
         என்னை படைத்தவனே !என் வாழ்நாளின்   நடந்த முக்கிய நிகழ்வெல்லாம் நீ விதித்த விதியால் என்னை மீறி நடந்தவை கள் தாம்  .அவைகள் அனைத்தும் எனக்கு நன்மையாகவே முடிந்திருக்கிறது
       இப் பொ ழுதும் எனக்கு ஒரு சோதனை வைத்துள்ளாய் ,என ரப்பே!
       அதில் வெற்றியடைய எனக்கு பொறுமையைக் கொடு
என்னை நேரான வழியில் நடத்து   
      வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய நபியுடைய சொல்லுக்கும் அடிபணிந்து  வாழ்ந்து  மரணிக்கும் பொழுதும் அவ்விதமே மரணிக்கும் பாக்கியத்தைத் தருவாயாக!
ஆமீன்

Thursday, 5 October 2017

ஈத் பெருநாள் வாழத்து

முகமறியாமல் முக நூல் வழியாக உள்ளங்களில் சகோதர பாசத்தை ஏற்படுத்தும் என் அன்பு சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

ஈத்عيد என்றஅரபி வார்த்தை க்கு திரும்ப திரும்ப வருதல் என்பது  பொருளாகும் .மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் அவன் வாழ்கின்ற காலமெல்லாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.  அளவற்ற ஆனந்தத்தை தரும் நாளை அரபியர் இது போன்ற நாள் திரும்ப திரும்ப வரவேண்டும் என்பதற்காக ஈத்  என அழைத்தனர்

قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ  ﴿5:114﴾
5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

இந்த வசனத்தில் ஈத் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது

ஜும்மா நாளையும் ஈத் என்று  ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை ஒரு தகவலுக்காக இங்கு குறிப்பிட்டேன்

எல்லாம் வல்ல அல்லாஹ்  உங்கள் அனைவரின் வாழ்க்கையில் இது போன்ற பல ஈத்களை கொண்டாட அருள் புரிவானாக!

இன்று போல் என்றும் உங்கள்  குடும்பத்தில் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் நிரப்புவானாக!

இன்றைய பெருநாளில் எப்படி தோளோடு தோளாக நம் சகோதரர்கள் நின்று தொழுதார்களோ  அதே போன்று வாழ்கின்ற காலமெல்லாம்  அல்லாஹ்வும் ரசூலும் காட்டிய வழியில் ஒன்றாக இணைந்திருக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

ஆமீன்

Monday, 2 October 2017

துஆ

يالله,يا احد يا واحد يا موجود يا جواد يا باسط يا كريم ياوهاب ياذا القوة ياغني يا مغني ي
ا فتاح يا رزاق يا عليم يا حكيم يا حي ياقيوم يارحمن يا
رحيم يا بديع السموات والارض.يا ذا الجلال والاكرام ,ياحنان يا منان انفحني منك بنفحة خير تغنني بها عمن سواك
(وان تستفتحو فقد جاءكم الفتح)
(انا فتحنا لك فتحا مبينا)
(نصر من الله زفتح قريب)
اللهم يا غني ياحميد,يامبدىء يامعيد ياودود يا فعال لما يريد
اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك واحفظني بما حفظت به الذكر وانصرني بما نصرت به الرسل انك على كل شيء قدير.

சிறப்பான ஜும்ஆ நாளின்  அதிகாலை தொழுகையை தொழ தவ்ஃபீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் !
யா அல்லாஹ்! இன்று அரஃபா மைதானத்தில் லட்சக்கணக்கான உன் அருள் பெற்ற அடியார்கள், ஜும்ஆவும் அரஃபா நாளும் இணைந்த மிக சிறப்பான நன்னாளில் உன் கருணை வேண்டி துஆ செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய துஆவை ஏற்று கொள்வாயாக!
இவ்வாண்டு அந்த பாக்கியம் பெறாத பாவிகளான எங்களின் பாவத்தை மன்னிப்பாயாக!
நாங்கள் இவ்வுலகத்தை விட்டு மரணிக்கும் முன் அரஃபா நாளும் ஜும்ஆ நாளும் இணைகின்ற ஆண்டில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா ரப்! இந்த அருள் இறங்கும் நேரத்தில் நான் கேட்கும் துஆவை ஏற்று கொள்வாயாக!

யா அல்லாஹ்! யா அஹது ! யா வாஹித்! யா மவ்ஜூத்! யா ஜவ்வாது! யா பாஸித்! யா கரீம்! யா வஹ்ஹாப்! யா தல் குவ்வத்தி! யா கனி! யாமுக்னி! யா ஃபத்தாஹ்! யா ரஜ்ஜாக்! யா அளீம்! யா ஹக்கீம்! யா ஹய்யு! யா கய்யூம்! யா ரஹ்மான்! யா ரஹீம்! யா பதியுஸ் ஸமாவாத்தி வல் அர்ள்! யா தல் ஜலாலி வல் இக்ராம்! யா ஹன்னான்! யா மன்னான்! இன்ஃபhஹ்னி மின்க பிநஃபஹத்தின் ஹைரின் துக்னியனி பிஹா அம்மன் ஸிவாக்!
யா அல்லாஹ்! ஏகனே! தனித்தவனே! உருவாகிருப்பவனே! வாரி வழங்குபவனே! விசாலமாக்குபவனே! சங்கைக்குரியவனே! கொடை கொடுப்பவனே! சக்தியுடையவனே! தேவையற்றவனே! பிறரை தேவையற்றவனாக ஆக்குபவனே! வெற்றியளிப்பவனே! ரிஜ்க் அளிப்பவனே! அனைத்தையும் அறிந்தவனே! நுண்ணறிவாளனே! நிலைத்திருப்பவனே! உறுதியானவனே! அளவற்ற அருளாளனே! நிகரற்ற அன்புடையோனே! வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! சக்தியும் கண்ணியமும் உடையவனே! மிக்க  இரக்குமுள்ளவனே! பெரிய உபகாரியே! உன்னை அல்லாத பிறரிடமிருந்து என்னை தேவையற்றவனாக ஆக்கும் விதமாக உன்னுடைய சிறந்த அருட்கொடையிலிருந்து எனக்குஅன்பளிப்பு வழங்குவாயாக!
நீ சொல்லியிருக்கிறாய் :
“நீங்கள் வெற்றியை தேடினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்”.

மேலும் நீ சொல்லியிருக்கிறாய்:
“உனக்கு மகத்தான வெற்றியை கொடுத்தோம்.”
“நிச்சயமாக உதவியும் அண்மையில் கிடைக்கும் வெற்றியும் அல்லாஹ்விடமிருந்தே இருக்கின்றன”.
அல்லாஹும்ம யா கனி! யா ஹமீது! யா முப்தியு! யா முயீது! யா வதூத்! யா فعال லிமா யுரியீத்! இக்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக! வ واغنني பிஃவள்லிக அம்மன் ஸிவாக்! வஹ்ஃபள்னி பிமா ஹஃபிள்த பிஹி திக்ர! வன்ஸுர்னி பிமா நசர்த பிஹி ரஸுல இன்னக்க அலா குல்லி ஷைய்யின் கதீர்!
யா அல்லாஹ்! தேவையற்றவனே! புகழுக்குரியவனே! உருவாக்குபவனே! மீண்டும் உயிர்பிப்பவனே! உள்ளன்புடையவனே! நாடியவற்றை செய்பவனே! நீ ஹராமா க்கியதிலி ருந்து  நீ ஹலாலாக்கியவற்றை கொண்டு எனக்கு போதுமாக்குவாயாக! உன்னுடைய கருணையை கொண்டு உன்னை அல்லாதவர்களை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக! உன்னுடைய குர்ஆனை எப்படி காப்பாற்றினாயோ அவ்வாறே என்னையும் காப்பாற்றுவாயாக! உன்னுடைய நபிமார்களுக்கு உதவி செய்ததை போன்று எனக்கும் உதவி செய்வாயாக! நீ அனைத்து பொருட்களின் மீதும் சக்தி உடையவனாக இருக்கின்றாய்!

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

வ சல்லல் லாஹு அலா முஹம்மத் வ சல்லல் லாஹு அலை ஹி வசல்லம்

Sunday, 24 September 2017

காலை நேர துஆ

اللهم إني أسألك في صلاتي ودعائي . بركة تطهر بها قلبي، وتكشف بها كربي ، وتغفر بها ذنبي ، وتصلح بها أمري ، وتغني بها فقري ، وتذهب بها شري
யா அல்லாஹ்! என்னுடைய தொழுகையிலும்,என்னுடையதுஆ விலும்
பரக்கத்தைக் கேட்கிறேன் .
அதன் மூலம் என் உள்ளம் பரிசுத்தமடைய வேண்டும். என்னுடைய துன்பங்கள் நீங்க வேண்டும்,என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,என்னுடைய வறுமை நீக்கப்படவேண்டும்,என்னுடைய காரியங்கள் சீரமைக்கப்படவேண்டும்,
என்னுடைய தீமைகள் போக்கப்படவேண்டும்,
என்னுடைய கவலைகள்,துக்கங்கள் மகிழ்ச்சியாக மாற்றப்படவேண்டும்,
என்னுடை நோய் குணமாக வேண்டும்,
என்னுடைய கடன்கள் நிறைவேறவேண்டும்,
என்னுடைய முகம் பிரகாசமாக வேண்டும்.
யா அல்லாஹ்! யாரஹ்மான்!
என்னுடைய தொழுகை உன்னுடைய பரக்கத்தை கொண்டு வரும் வகையில் முழுமையாக அமைய தவ்பீக் செய்வாயாக!
ஆமீன்

Friday, 15 September 2017

சஹர் நேர துஆ

அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹும்ம லகல் ஹம்து வலக் ஷுக்று

கருணையாளனே !
உன் கருணையினால் அதிகாலை தொழுகையை தொழுதோம்

யா ரப் !எங்கள் அமல்கள் எவ்வளவு குறைபாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்

!நாங்கள் பலவீனமானவர்கள்,நீ கொடுத்த அருட்கொடைகளுக்கு நிகராக எங்களால் வணங்கமுடியாது

நாங்கள் உன்னையே வணங்கிறோம் உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம்

உன் அருள் இரங்கும் சஹர் நேரத்தில் கேட்கிறோம் எங்கள் துஆ வை ஏற்றுக்கொள்வையா க !

உன் நபி உன்னிடத்தில் எதையெல்லாம் கேட்டார்களோ அவைகளை எங்களுக்கும் கொடுப்பாயாக

எதை எதையெல்லாம் விட்டும்  பாதுகாப்பு கேட்டார்களோ அவற்றை எல்லாம் விட்டு எங்களை பாதுகாப்பாயாக

ஏக இறைவா!

வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!

வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் 

யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே!

என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக!

வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
வ ணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை

நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாயகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

யா அல்லாஹ் ! என்னை மன்னித்து விடு!

யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு!

யா அல்லாஹ் !என்னை மன்னிப்பாயாக!

எனக்கு அருள் புரிவாயாக!

எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக!

எனக்கு ரிஜ்க் அளிப்பாயாக!

என்னை உயர்த்துவாயாக!

இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.

என் ரப்பே  பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக.

நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து

இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

என் இரட்சகனே!
என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக.

நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்!

முஸ்லிமான மக்களுக்கு பாது காப்பளிப்பாயாக ! எதிர்படைகளை தோற்கடிப்பாயாக!

இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.

இ றைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

இ றைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக.

நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக.

எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!

இ றைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.

இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு!

அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன்.

இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.

எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ கருணை புரிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் கருணை புரிவாயாக!

நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்.
ஆமீன்

Thursday, 14 September 2017

ஜும்மா நாளில் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.

கருணையாளனே! பரக்கத்தான ஜும்மா நாளில் உன்னிடம் கையேந்தி கேட்கிறோம்
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்!
நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே!
நீ அதை வாழச் செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.

யா அல்லாஹ்! நல்லறிவால்   எனக்கு உதவி செய்வாயாக!.
சகிப்புத்தன்மையால்  எனக்கு அழகை கொடுப்பாயாக!.
தக்வாவால் எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை  எனக்கு அலங்காரமாக அளிப்பாயாக!

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன்.
நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக!
அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!

அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக!
எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!

என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களைக் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளைமன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

ஆமீன்

Monday, 11 September 2017

காலை துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமாஅமாத்தானா வஇலைஹிந் நுஷூர்.

    யா அல்லாஹ்! நீயே எனது ஆத்மாவை படைத்தாய்! நீயே அதை மவ்த்தாக்குவாய். அது வாழ்வதும், இறப்பதும், இரண்டும் உனக்காகவே! நீ அதை வாழ செய்தால், உனது நல்லடியார்களை எதை கொண்டுக் காத்தருள்வாயோ அதை கொண்டு காத்தருள்! நீ அதை மரணிக்க செய்தால், அதை மன்னித்துவிடு . அதன் மீது இரக்கங்காட்டு.

யா அல்லாஹ்! இல்மைக் கொண்டு எனக்கு உதவி செய்வாயாக!. சகிப்புத்தன்மையைக் கொண்டு எனக்கு அழகை கொடுப்பாயாக!. தக்வாவைக் கொண்டு எனக்கு மேன்மை அளிப்பாயாக! நிம்மதியை கொண்டு எனக்கு அலங்காரம் அளிப்பாயாக!

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நீ எனக்கு மாறு செய்யாத வாக்கை பெறக் கேட்கிறேன். நான், ஒரு மனிதன் எனவே, ஏதேனும் ஒரு முஃமினுக்கு நான் தொல்லை கொடுத்துவிட்டாலோ , ஏசி பேசி விட்டாலோ அடித்து விட்டாலோ சாபம் கொடுத்துவிட்டலோ அதை அம்முஃமினுக்கு ரஹ்மத்தாக்குவாயாக! அவரை தூய்மைப்படுத்துவாயாக! அதனைக் கொண்டு அவர் உனது அண்மையை அடையக் காரணமாக்குவாயாக!

அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக! எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!
வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக! என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!

என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

ஆமீன்