Sunday, 26 February 2017

எதிரியின் ஏளனச்சிரிப்ப்

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆ
-----------------------------கணியூர் இஸ்மாயில் நாஜி

ஏகனே! எதிரிகளின் ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து என்னை காப்பாயாக
.
  பொது மக்கள் கூடியுள்ள இடத்தில் நாம் ஏதோ ஒரு காரணத்தினால் வழுக்கி விழுந்து விட்டால் உடனடியாக நாம் யாராவது நம்மை பார்த்து கேலியாக சிரிக்கிறார்களா குறிப்பாக நம்முடைய எதிரிகள் நம்மை பார்த்து சிரிக்கிறார்களா என்று பாப்போம்.

அப்படி சிரிப்பதை பார்க்கும் பொழுது விழுந்ததினால் ஏற்படும்  வlலியை விட அந்த ஏளன சிரிப்பினால் ஏற்படும் மன உளைச்சல்  நம்மை மிகவும் பாதிக்கும்.

எதிரிகள் நம்மை பார்த்து ஏளன சிரிப்பு சிரிக்க கூடாது என்று நபிமார்கள் கூட விரும்பியிருக்கிறார்கள்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்ஸினா மலைக்கு சென்ற போது சமுதாயத்திற்கு வழி நடத்தும் பொறுப்பை தன்னுடைய சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து சென்றார்கள்.

அவர்கள் திரும்பி வந்த போது அம்மக்கள் காளை மாட்டை வணங்கி இணை வைப்பதை கண்டு மூஸா நபியவர்கள், கோபமுற்று ஹாரூன் நபியின் தலைமுடியையும் தாடியையும் பிடித்து இழுத்தார்கள்.
அப்போது ஹாரூன் நபி சொன்னார்கள்.
7:150  فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ ۖ   قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ

7:150. ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”

ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் எதிரிகளின் ஏளன சிரிப்பை கண்டு பயந்திருக்கிறார்கள்.
நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு குணம் அடைந்த பின் அவரிடம், அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த சோதனைகளில் பெரும் சோதனையாக எதை சொல்வீர்கள்?? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஏற்பட்ட பெரும் சோதனை எதிரிகள் என்னை பார்த்து ஏளனசிரிப்பால்  ஏற்பட்ட மன உளைச்சல்  தான் என்றார்கள்

நாம் வாழ்கையில் தோல்வியடைந்து விட கூடாது என்று எண்ணுவதை விட பிறர் நம்மை ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி விட கூடாது என்று தான் நாம் அச்சப்படுவோம்.

இந்த மனித இயல்பை வைத்து தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நமக்கு இந்த துஆ வை கற்றுக் கொடுத்தார்கள்.
6616. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பாளர்;அபூஹுரைரா(ரழி)

இன்னொரு ஹதீஸில்
((اللَّهُمَّ احْفَظنِي بالإِسْلاَمِ قائِماً، واحْفَظْنِي بالإِسْلاَمِ قاعِداً، واحْفَظنِي بالإِسْلاَمِ راقِداً، ولا تُشْمِتْ بِي عَدُوّاً ولا حاسِداً. اللَّهُمَّ إِنِّي أسْألُكَ مِنْ كُلِّ خَيْر خزائِنُهُ بِيَدِكَ، وأعُوذُ بِكَ مِنْ كُلِّ شَرَ خَزَائِنُهُ بِيَدِكَ))
(
([1 ([1]) الحاكم، 1/525 وصححه ووافقه الذهبي، وابن حبان، 3/ 214، والدعوات الكبير للبيهقي، ص 165، وحسنه الألباني في صحيح الجامع، 2/398، وفي سلسلة الأحاديث الصحيحة، 4/54، برقم 154])

“அல்லாஹ்வே! நான்  நின்ற நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை  பாதுகாப்பாயாக
நான் அமர்ந்திருக்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை  பாதுகாப்பாயாக
நான் உறங்கும் நிலையில் இஸ்லாத்தின் மூலம் என்னை  பாதுகாப்பாயாக
என் எதிரி களோ ,பொறாமைக்காரர்களோ என்னைப் பார்த்து நகைக்குமாறு செய்துவிடாதே”

எனும் துஆ வையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
எனவே நாம்
اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ))
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக  மின் ஜஹ்தில் பலாயி
வ தர்கிஷ் ஷகாயி வ ஸூயில் களாயி, வ ஷமாதத்தில் அஃதா
என் ரப்பே !  தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளின் (ஏளனச்சிரிப்பால்) ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
என்ற துஆ வை தினந்தோறும் கேட்போம்.

Saturday, 25 February 2017

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ  رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; நரகநெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்களுடைய ஆன்மாக்களைச் சான்றோர்களுடைய ஆன்மாக்களுடன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.

      يارب يارب يارب  اللهم  ياكبير  ياسميع يابصير  يامن لا شريك له ولا وزير له

என்னைப் பராமரிப்பவனே!எனது இரட்சகனே!எனது ரப்பே!யா அல்லாஹ்!
வலுப்பமுடையவனே! எதனுடைய துணையுமின்றி கேட்கும் ஆற்றலுடையவனே! எதனுடைய துணையுமின்றி பார்க்கும் சக்தியுடையவனே! இணை என்பதே இல்லாதவனே! ஆலோசனை அளி்ப்போரும் இல்லாதவனே!
சூரியனையும்,பிரகாசிக்கும் சந்திரனையும் படைத்தவனே!
சோதனைகள் சூழப்பட்டு அச்சப்பட்டு அடைக்கலம் தேடுபவனுக்கு அடைக்கலமானவனே!
   எங்களை இவ்வுலக ஆபத்துகளிலிருந்து காப்பாயாக!
எங்களின் தேவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களை யாரிடமும் கையேந்தாதவர்களாக ஆக்குவாயாக!
என்றென்றும் உன் திருப்தியை பெற
வணங்கும நல்லடியார்களா எங்களை ஆக்குவாயாக!
யா ரப்பல் ஆலமீன்
ஆமீன்

Thursday, 23 February 2017

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மாஅமாஅத்தனா வ இலைக்க ந்நுஷூர்
யா ரப் இன்று எங்களுக்கு உயிர் கொடுத்து புதிய நாளைக் கொடுத்துள்ளாய் அதன உன்னுடைய வணக்க வழிபாடுகளில் தொடங்கி உன்னுடைய கருணையையும்
் மன்னிப்பையும் திருப்தியையும் பெற்ற நாளாக முடித்து வைப்பாயாக!
எங்களின் இம்மை மறுமை தேவைகளை பூர்த்தி செய்வாயாக!
எங்களின் கவலைகளைப் போக்குவாயாக

اللهم اكتب لنا تغيرا للأفضل، في نفوسنا و أحوالنا و حقق لنا ما نتمنى، يارب إنا نستودعك كل ما نخشى فقدانه، ف أنت خير الحافظين

யா அல்லாஹ்! எங்கள் நப்ஸிலும், எங்கள்  நிலைமைகளிலும்,நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவாயாக!
எங்களின் கற்பனைகளை உண்மையாக்குவாயாக!

எங்கள் இரட்சகனே! நாங்கள் எதனை இழந்துவிடுவோம் என அஞ்சுகிறோமோ அவற்றை உன்னிடமே ஒப்படைக்கிறோம்.
நீ தான் சிறந்த பாதுகாவலன்.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!னன எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட எங்களால் தாங்க முடியாதசுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக!
எங்கள் மீது கருணை புரிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளரான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
ஆமீன்