Monday, 7 February 2022

ஜுமுஆ துஆ

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா அமாத்தனா வஇலைஹிந் நுஷுர்
  எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை நேரத்தில் தொழ
வாய்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும்.
  யா அல்லாஹ் இந்த பரக்கத்தான ஜும்மா நாளில் உன்னை பணிந்து 
கேட்கிறேன் ,இந்த நாளின் அனைத்து நன்மைகளையும் எங்களுக்குத் தருவாயாக !
எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக! 
எங்களின் ரப்பே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதையே அளிப்பாயாக! 
அல்லாஹ்வே எனது காரியங்களுக்குப் பாதுகாவலாய் அமையும் எனது தீனை செம்மைப்படுத்துவாயாக! எனது வாழ்வு கழியும் இந்த துன்யாவை எனக்கு முறைப்படித்துத்  தருவாயாக நான் மீண்டு எழும்      
மறுமை வாழ்வை செம்மையாக்குவாயாக நற்காரியங்களைச் செய்வதில் எனது வாழ்நாளை அதிகப்டுத்துவயாக தீய காரியத்தை விடுவதில் மரணத்தை எனக்கு சுகமாக்குவாயாக
 நீ யாருக்கெல்லாம் நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக,
 நீ யாருக்கெல்லாம் சுகத்தைத்தந்தாயோ அவர்களுடன் எனக்கும் சுகத்தைத் தருவாயாக     
நீ யாரையெல்லாம் நண்பனாக ஆக்கி கொண்டா யோ அவர்களில் என்னையும் இணைத்துக் கொள்வாயாக 
 நீ கொடுத்ததில் பரக்கத்தைத் தருவாயாக 
நீ நிர்ணயத்தில் தீங்கை விட்டும் என்னைக் காப்பாயாக 
 யா அல்லாஹ்! உன்னிடம் நிரந்தரமான ஈமானைக் கேட்கிறேன்.
என்றும் உன்னை அஞ்சும் உள்ளத்தைக் கேட்கிறேன்.
இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் கல்வியைக் கேட்கிறேன்.
உண்மையான நம்பிக்கையைக் கேட்கிறேன்.
உறுதியான நேர்வழியைக் கேட்கிறேன்.
ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் சுகத்தைக் கேட்கிறேன்.
எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவைகளின் காரணமாக உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்துவிடாதே!
எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக உன்னிடம் உள்ள அபரிதமான நன்மைகளை தடுத்துவிடாதே!
எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக கேள்விக்கணக்கு கேட்கும் நாளில் எங்களை தண்டித்துவிடாதே!
எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக எங்களுக்கு எந்த இழப்பையும்  செய்துவிடாதே!
நீ சங்கைக்குரியவன்! உன்னுடைய கருணை அனைத்துப் பொருட்களின் மீது பரவி இருக்கிறது!
எங்களின் துஆவை ஏற்றுக்கொள்வாயாக!
اللهم صَــــــل وَسَلَّم علَےَ مُحمَّــــــــدْ و علَےَ آل مُحمَّــــــــدْ كما صَــــــلٌيت وَسَلَّمْتَ علَےَ إِبْرَاهِيمَ و علَےَ آل إِبْرَاهِيمَ إِنَّك حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك علَےَ مُحمَّــــــــدْ و علَےَ آل مُحمَّــــــــدْ كما باركت علَےَ إِبْرَاهِيمَ و علَےَ آل إِبْرَاهِيمَ فى الْعَالَمِينَ إِنَّك حَمِيدٌ مَجِيد

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.