Friday, 29 May 2020

#இப்தார்_நேரப்_பிரார்த்தனை

ரஹ்மானே!
அல்லாஹ்வே!
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இவ்வேளையில்
நாங்கள் எதிர்பார்ப்பதை விட
அதிகமான நன்மைகளைத்
தருவாயாக!
நாங்கள் அஞ்சுவதை விட
அதிகமான தீங்குகளை எங்களை
விட்டும் நீக்குவாயாக!
எப்போதும் உன்பக்கமே
எங்கள் உள்ளத்தை இணைப்பாயாக!
உன்னையல்லால் பிறரின் பால்
எங்கள் உள்ளத்தை இணைத்து விடாதே!
எங்களின் குறைகளை அறிந்துள்ளாய்
அவைகளை மறைப்பாயாக!
எங்களின் தேவைகளை அறிந்துள்ளாய்
அவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களின் பாதுகாவலன் நீ மட்டுமே
உன்னையையே வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியையும்
தேடுகிறோம்.
ஆமீன்.

No comments:

Post a Comment