Friday, 29 May 2020

காலை நேர துஆ

யா அல்லாஹ்! துஆ ஏற்றுக் கொள்ளப்படும் இந்நேரத்தில் கேட்கிறேன் என் பாவங்களை மன்னிப்பாயாக!
கடந்த காலங்களில் என் திறமைக் குறைவின் காரணமாக நான் செய்த செயல்களினால் ஏற்பட்ட வேதனையும் அதன் எதிர் வினையாக எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய கவலையும் என்னை நிலைகுலையச் செய்கிறது.
தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் உனக்கு கோடிக்கான அடியார்கள் உண்டு
ஆனால் என்னை ஆதரிப்பதற்கும் ஆறுதல் தருவதற்கும் என் நிலைமையை சீர் செய்வதற்கும் ஆற்றல் வாய்ந்த ஏக இறைவன் நீ ஒருவன் மட்டுமே!
யா அல்லாஹ்!
என் நிலைமைகளை சீர் செய்வாயாக! என் கவலையை போக்குவாயாக ! என் மீது கருணை காட்டுவாயாக !
ஆமீன்

No comments:

Post a Comment