#துஆ; நபிசுலைமான்(அலை)அவர்கள் காட்டும் வழி
********************
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
(அல்குர்ஆன் : 38:35).
********************
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
(அல்குர்ஆன் : 38:35).
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட இந்த துஆவை சற்று ஆழமாக சிந்தியுங்கள்.
முதலாவதாக,ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் தன் தேவையை கேட்பதற்கு முன் எனது "பாவத்தை மன்னிப்பாயாக" என்று ஆரம்பிக்கிறார்கள்.
நாமும் இறைவனிடம் கையேந்தும் போது முதலில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
நாமும் இறைவனிடம் கையேந்தும் போது முதலில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.
இரண்டாவதாக, நாம் விரும்பும் நம்முடைய தேவைகள் கிடைப்பது நடைமுறையில் சாத்தியமானதா, அது கிடைக்குமா, என்று சிந்திக்காமல் அல்லாஹ்வின் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நம்முடைய பிரார்த்தனையை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற நல்லெண்ணம் கொண்டவர்களாக மனம் ஓர்மையுடன் கேட்க வேண்டும்.
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த உலகம் அழியும் வரை யாருக்கும் கிடைக்காத ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமா?
அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானா?
என்றெல்லாம் சந்தேகப்படாமல் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
நபி அவர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்த அல்லாஹு தலா நபிஅவர்கள் கேட்டதையும் கொடுத்தான். அவர்கள் கேட்காததையும் மேலதிகமாகக் கொடுத்தான்.
அல்லாஹ் சொல்கிறான்;
இது நடைமுறையில் சாத்தியமா?
அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானா?
என்றெல்லாம் சந்தேகப்படாமல் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
நபி அவர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்த அல்லாஹு தலா நபிஅவர்கள் கேட்டதையும் கொடுத்தான். அவர்கள் கேட்காததையும் மேலதிகமாகக் கொடுத்தான்.
அல்லாஹ் சொல்கிறான்;
فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
(அல்குர்ஆன் : 38:36)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ
கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
(அல்குர்ஆன் : 38:37)
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
(அல்குர்ஆன் : 38:36)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ
கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
(அல்குர்ஆன் : 38:37)
وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 38:38)
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 38:38)
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
(அல்குர்ஆன் : 38:39)
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 38:40).
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
(அல்குர்ஆன் : 38:39)
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 38:40).
ஆம் சகோதரர்களே!!!
நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் இது நடக்குமா? என்று ஐயப்படாமல் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு நிச்சயம் அல்லாஹ் நமக்கு தருவான் என்ற மன உறுதியுடன் கேட்போமாக.
---------மீள் கணியூர் இஸ்மாயில் நாஜி
நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் இது நடக்குமா? என்று ஐயப்படாமல் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு நிச்சயம் அல்லாஹ் நமக்கு தருவான் என்ற மன உறுதியுடன் கேட்போமாக.
---------மீள் கணியூர் இஸ்மாயில் நாஜி
No comments:
Post a Comment