Friday, 29 May 2020

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ

தராவீஹ் தொழுகைக்குப் பின் இமாம்கள் கேட்கும் துஆ
_____==_____=======_
الّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வலா ஆலி முஹம்மத்தின்
யா அல்லாஹ்!
எங்களை பரிபூரணமான ஈமான் கொண்டவர்களாக,
நீ விதித்த கடமைமைகளை
நிறைவேற்றுபவர்களாக !
தொழுகைகளைப் பேணுபவர்களாக,
ஜகாத்தை கொடுப்பவர்களாக,
உன்னிடம் இருப்பவைகளைத் தேடுபவர்களாக,
உன்னுடைய மன்னிப்பை ஆதரவு வைத்தவர்களாக ,
நேர்வழியைப் பற்றிப்பிடித்தவர்களாக,
கேளிக்கைகளைப் புறக்கணித்தவர்களாக,
இவ்வுலகின் மீது பற்றற்வர்களாக,
மறுமையின் மீது ஆர்வமுடையவர்களாக,
உன் விதியின் மீது திருப்தியுடையவர்களாக,
அருட்கொடைகளின் மீது நன்றி செலுத்துபவர்களாக,
துன்பங்களின் மீது பொருமையாளர்களாக,
மறுமை நாளில் உன்னுடைய நபியும்,தூதரும்,தூய்மையான நண்பரும்,உன் நேசத்துக்குறிய வருமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடியின் கீழ் வலம்வருபவர்களாக,
ஹவ்ளுல் கவ்ஸருக்கு நீர் அருந்த வருபவர்களாக,
மென்மையான மற்றும் கனமான பட்டாடைகளை அணிந்தவர்களாக,
சொர்கத்தின் உணவுகளை உண்பவர்களாக,
பாலையும் , சுத்தமான தேனையும் அருந்துபவர்களாக,
உன் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்)ஆகியோருடன்
இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பவர்களாக
எங்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! சங்கைமிகு இம்மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாக்கியவான்களாக எங்களை ஆக்குவாயாக!
எங்களை யாஅல்லாஹ்,யாஅல்லாஹ்,யாஅல்லாஹ் நிராகரிக்கப்பட்ட கெடுவாய்ப்பு பெற்றவர்களாக ஆக்கிவிடாதே!
யா அல்லாஹ்! ,ரமளானுடைய இரவுகளில் ஒவ்வொருஇரவிலும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற்றவர்கள், பாதுகாப்பு பெற்றவர்கள்,நரகில் நுழையாமல் தடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எங்கள் இரட்சகனே! நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட, அதிலிருந்து விடுதலை பெற்றவர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!
கேள்வி கணக்கு நாளில் எங்களை மன்னிப்பாயாக!
ஸல்லல்லாஹு வ ஸல்லம அலா கைர கல்கி ஸய்யித்னா முஹம்மதின் வ ஆலிஹி , வ ஸஹ்பிஹி அஜ்மயீன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

No comments:

Post a Comment