என் ரப்பே! இந்த பஜ்ருடைய நேரத்தில்
எங்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாயாக!
எங்கள் உள்ளங்களை நல்லவற்றை விரும்பும் உள்ளமாக ஆக்குவாயாக!
எங்களுக்கு உதவிசெய்பவனாக நீ
ஆகுவாயாக!
நல்வாய்ப்பை, குதுகாலத்தை,மன்னிப்பை
எங்களின் மீது விதிப்பாயாக!
எங்களின் துக்கங்களை போக்குவாயாக!
உன்னை அஞ்சிவாழ்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! உன்னுடைய அருட்கொடையைப் பெற்ற ஆனந்தத்தில் அழுத வண்ணம் நன்றி பெருக்கால் சஜ்தாவில் விழவைக்கும் மகிழ்ச்சியை ரிஜ்காக எனக்கு அருள்வாயாக!
அத்தகைய மகிழ்ச்சியின் பால் நான் மிகவும் தேவையுடையவனாக இருக்கிறேன்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இந்த துவை) ஏற்றுக் கொள்வாயாக;
நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”.
எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக;
நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
ஆமீன்
No comments:
Post a Comment