யா அல்லாஹ்!
உன்னுடைய சிறப்புகள்
உன்னுடைய கண்ணியம்,
உன்னுடைய மேன்மை,
உன்னுடைய வல்லமை,
உன்னுடைய ஆற்றல்,
உன்னுடைய அழகிய பெயர்கள்,
உன்னுடைய சிபத்துகள்
ஆகியவைகள முன்னிறுத்தி
உன்னிடம் கேட்கிறேன்...
இப்பொழுது நாங்கள் இருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து
எங்களை விடுவிப்பாயாக!
رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்,
அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும்
எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!
எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
எங்களை மன்னித்தருள் செய்வாயாக!
எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை நிராகரிக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286
اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.
இறைவா! எங்கள் அதிபதியே!
இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக.
நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
No comments:
Post a Comment