Tuesday, 8 January 2019

காலைத் தொழுகைக்குப்பின் துஆ

அல்ஹம்துலில்லாஹ்!
காலைத் தொழுகையை தொழுவதற்கு அருள் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.
யா அல்லாஹ்! உன்னிடம் நிரந்தரமான ஈமானைக் கேட்கிறேன்.
என்றும் உன்னை அஞ்சும் உள்ளத்தைக் கேட்கிறேன்.
இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் கல்வியைக் கேட்கிறேன்....
உண்மையான நம்பிக்கையைக் கேட்கிறேன்.
உறுதியான நேர்வழியைக் கேட்கிறேன்.
ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் சுகத்தைக் கேட்கிறேன்.
எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவைகளின் காரணமாக உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்துவிடாதே!
எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக உன்னிடம் உள்ள அபரிதமான நன்மைகளை தடுத்துவிடாதே!
எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக கேள்விக்கணக்கு கேட்கும் நாளில் எங்களை தண்டித்துவிடாதே!
எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக எங்களுக்கு எந்த இழப்பையும் செய்துவிடாதே!
நீ சங்கைக்குரியவன்! உன்னுடைய கருணை அனைத்துப் பொருட்களின் மீது பரவி இருக்கிறது!
எங்களின் துஆவை ஏற்றுக்கொள்வாயாக!
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
كنزالعمال

See More

No comments:

Post a Comment