Wednesday, 5 May 2021

துஆ

رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ 
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” .
 “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. 

“எங்கள் இறைவா! ஏக இறைவனை நிராகரிப்பவர்களுக்கு  எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! 

எங்கள் இரட்சகனே!!
 எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5

  யா அல்லாஹ்!உன்னிடம் மன்றாடிக் கேட்கிறேன்

 நீ ஒருவன் ஏகன் யாரிடமும் எத்தேவையும் இல்லாதவன் 

நீ யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெற்றெடுக்கப் படவும் இல்லை 
அத்தகைய என் ரப்பே !என்னுடை பாவங்களை மன்னிப்பாயாக!
நீ மன்னிப்பவன்் கருணையாளன்

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها
யா அல்லாஹ்! 
பலனில்லாத கல்வியிலிருந்து உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்

உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்து உன்னிடம்
பாதுகாவல் தேடுகிறேன்

நிறைவுபெறாத மன இச்சைகளைலிருந்து
உன்னிடம் பாது காவல் தேடுகிறேன்

நீ ஏற்றுக் கொள்ளாத துஆக்களிலிருந்து
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

கருணையாளனே! 
அனைத்து முஸ்லிம்களின் துன்பங்களையும்  நீக்குவாயாக!
ஆமீன்

No comments:

Post a Comment