யா அல்லாஹ்!
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்
#இந்நோய்
நீ நாடியவர்களைத் தொற்றிக் கொள்ளும்,
நீ நாடியவர்களை விட்டும் விலகி ஓடும்
உனது படைகளில் ஒன்றாக இருக்குமேயானால்
எங்கள் இரட்சகனே!
எங்களின் இல்லங்களை விட்டும்,
எங்களின் குடும்பத்தாரைவிட்டும்,
எங்களின் பிள்ளைகளை விட்டும்,
எங்களின் நேசத்திற்குறியவர்களை விட்டும்
இந்நோய் அணுகாமல்
விலக்கிவிடுவாயாக!
உன் உள்ளார்ந்த கருணையினால்
நோயின் தீங்கிலிருந்து எங்களைப்
பாதுகாப்பாயாக!
துன்பங்கள்,சோதனைகளிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!
நீ அனைத்துப் பொருட்களின் மீதும்
ஆற்றல் படைத்தவன்
#இப்தார்பிரார்த்தனை
No comments:
Post a Comment