Friday, 27 October 2017

துஆ

அல்ஹம்துலில்லாஹ் உயிர் கொடுத்து உணவும் கொடுத்து மானத்தை மறைக்க ஆடையையும் கொடுத்த இரட்சகனே!
      லிபாசுத் தக்வா என்ற எங்கள் பாவங்களை தடுக்கும்  தக்வா என்ற ஆடையைத்தருவாயாக!
       உன்னை அன்றி வேறுயாரிடமும்் கை ஏந்தாமல் எங்களைக்காப்பாயாக!
         எங்களின் மனஅழுத்தத்தைப் போக்குவாயாக!
         என்னை படைத்தவனே !என் வாழ்நாளின்   நடந்த முக்கிய நிகழ்வெல்லாம் நீ விதித்த விதியால் என்னை மீறி நடந்தவை கள் தாம்  .அவைகள் அனைத்தும் எனக்கு நன்மையாகவே முடிந்திருக்கிறது
       இப் பொ ழுதும் எனக்கு ஒரு சோதனை வைத்துள்ளாய் ,என ரப்பே!
       அதில் வெற்றியடைய எனக்கு பொறுமையைக் கொடு
என்னை நேரான வழியில் நடத்து   
      வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய நபியுடைய சொல்லுக்கும் அடிபணிந்து  வாழ்ந்து  மரணிக்கும் பொழுதும் அவ்விதமே மரணிக்கும் பாக்கியத்தைத் தருவாயாக!
ஆமீன்

No comments:

Post a Comment