Thursday, 12 August 2021

துஆ

அல்லாஹும்ம லகல் ஹம்த் 
வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி

யாஅல்லாஹ்! உனக்கே புகழ் அனைத்தும் .
யா ரஹ்மான்! நா வரட்சியால் தவித்த அண்ணை ஹாஜிராவிற்கும் இஸ்மாயில் நபிக்கும் ஜம்ஜம் தண்ணீரை உருவாக்கி மகிழ்வைத் தந்தவனே!
இன்றைய நாளை மகிழ்வானதாகவும, பரக்கதானதாகவும. அதன்பின் துன்பமே வராத பாக்கியமிக்க தாகவும் ஆக்குவாயாக!
சிக்கலாகியிருக்கும் எங்கள் காரியங்களை சீர்திருத்துவாயாக
பரக்கத்தான பெருநாள் காலை வேளையில் உன்னிடம் கையேந்திக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!

உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!

அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்.

அப் பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்.

அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்.

அப்பார்வையினால் எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்.

அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்.

அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் இம்மை,மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்

அப்பார்வையினால் எம் மக்களை அடக்கி ஆழ நினைப்போரை அவர்கள் புறப்படும் இடத்திலேயே தடுத்து நிருத்தப்படவேண்டும்.

அப்பார்வையினால் எங்கள் சிறை வாசிகள் விடுவிக்கப்படவேண்டும். அவர்களின் குடும்பங்களில் மகிழ்சியும், குதூகலமும் நிலவ வேண்டும்.

ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

No comments:

Post a Comment