Sunday, 22 August 2021

அண்ணல் நபி அவர்களின் பிரார்த்தனை

இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட பிரார்த்தனை.
____________

اللَّهُمَّ أَعْطِنِي إِيمَانًا صَادِقًا ، وَيَقِينًا لَيْسَ بَعْدَهُ كُفْرٌ ، وَرَحْمَةً أَنَالُ بِهَا شَرَفَ كَرَامَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ عِنْدَ الْقَضَاءِ ، وَنُزُلَ الشُّهَدَاءِ ، وَعَيْشَ السُّعَدَاءِ ، وَمُرَافَقَةَ الأَنْبِيَاءِ ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ ، اللَّهُمَّ أُنْزِلُ بِكَ حَاجَتِي ، وَإِنْ قَصُرَ رَأْيِي ، وَضَعُفَ عَمَلِي ، وَافْتَقَرْتُ إِلَى رَحْمَتِكَ ، فَأَسْأَلُكَ يَا قَاضِيَ الأُمُورِ ، وَيَا شَافِيَ الصُّدُورِ ، كَمَا تُجِيرُ بَيْنَ الْبُحُورِ أَنْ تُجِيرَنِي مِنْ عَذَابِ السَّعِيرِ ، وَمِنْ دَعْوَةِ الثُّبُورِ ، وَمَنْ فِتْنَةِ الْقُبُورِ ،
الكتب » صحيح ابن خزيمة » كِتَابُ الصَّلاةِ
யா அல்லாஹ்!உண்மையான ஈமானையும், 
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்,
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்,
நல்வாய்ப்பைப் பெற்றோர்களின் நல்வாழ்க்கையையும்,
 நபிமார்களின் நல் நேசத்தையும்,
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்.

யா அல்லாஹ்! எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது,
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது,
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்.
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல் எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே,எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே,எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக!-

No comments:

Post a Comment