ஆபத்துகள் அணுகாமலிருக்க
அனுதினமும் அல்லாஹ் விடம்
உங்கள் காரியங்களை ஒப்படையுங்கள்.
அவனிடமே உங்கள் தேவைகளை முன்வையுங்கள்
حَسْبِىَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129
யா அல்லாஹ்!
என் குடும்பத்தை,
என் ஆன்மாவை
என் ஆற்றலை,
என் அறிவை,
என் உள்ளத்தை,
என் கண்ணியத்தை,
என் வாழ்வாதாரங்களை
என் நல்வாய்ப்பை,
என் எதிர்காலத்தை
எனது வாழ்நாளின் இறுதியை
என காரியங்கள்
அனைத்தையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன்
அவற்றை ஜின்,மனித ஷைத்தான்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பாயாக!
நீ விரும்பகின்ற வழியில் அவைகளை பயன்படுத்துவாயாக!
எங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாயாக!
عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!”
(அல்குர்ஆன் : 10:85)
ஆமீன்.!
No comments:
Post a Comment