Monday, 11 January 2021

ஜும்மா துஆ

اللهم في يوم الجمعه أرزقنا نوراً في القلب وضياء في الوجه وسعةَ في الرزق وثباتاً على الحق  ومحبة في قلوب الخلق واستجابة للدعاء ياالله ❤
யா அல்லாஹ்! இந்த ஜும்மா நாளில் எங்கள் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக!
எங்கள் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துவாயாக!
சத்தியத்திலேயேநிலைத்து நிற்கச் செய்வாயாக!
உன்னுடைய படைப்பினங்களில் உள்ளங்களில் எங்களின் மேல் அன்பை உருவாக்குவாயாக!
இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக!

‏اللهم أني أستغفرك من جميع الذنوب والخطايا التي أعلمها والتي لا أعلمها سبحانك تعلم مافي نفسي ولا أعلم مافي نفسك وأنت علام الغيوب
அல்லாஹ்வே!நான்  அறிந்த,நான் அறியாமல் செய்த பாவங்கள்,தவறுகள்  அனைத்திற்காகவும் உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.
 
நீ பரிசுத்தமானவன் ,என் உள்ளத்தில் உள்ளவற்றை நீ அறிவாய். நீ நினைப்பதை என்னால் அறியமுடியாது.
நீ அனைத்து ரகசியங்களையும் நன்கு அறிந்தவன்.
يارب من كان في قلبه ألم فخفف عنه و اقض حاجته إن كان بها خيرا له ولا تجعل حاجاتنا عند أحد من خلقك 
என் ரட்சகனே! எவருடைய உள்ளத்தில் வேதனை இருக்கிறதோ அதை அவருக்கு லேசாக்குவாயாக!
அவருடைய தேவைகளை அவை அவருக்கு பலன் தருமானால் அவற்றை நிறைவேற்றுவாயாக!
எங்கள் தேவைகளுக்காக உன்னை அல்லால் யாரிடமும் கெஞ்சவைத்துவிடாதே!
اللهم افتح لي أبواب الخير والرزق والسعادة من حيث لا أحتسب

யாஅல்லாஹ்!எனக்கு உன்னுடைய நன்மைகள்,ரிஜ்க் மற்றும் பாக்கியங்களின் வாசல்களை நாங்கள் அறியாத புறத்திலிருந்து திறந்துவிடுவாயாக!
ஆமீன்

No comments:

Post a Comment