Sunday, 4 October 2020

காலை துஆ

الحمدلله والصلاة والسلام علي محمد وعلى آله وأصحابه أجمعين 
யா அல்லாஹ்! என்னை பொறுமையாளாக ஆக்கு!
என்னை உனக்கு நன்றி செலுத்துபவனாக ஆக்கு!
என்னை என் பார்வையில் சிறியோனாகவும்,மற்றவர்களது பார்வையில் மதிப்புமிக்கவனாகவும் ஆக்கி அருள்புரி!
எங்களது பூமியிலே பரக்கத்தையும்,செழிப்பையும்,நிம்மதியான சூழ்நிலையையும் அருள்வாயாக!
நீ அளித்த அருட்கொடைகளில் உள்ள பரக்கத்தை அடையாதவனாக என்னை ஆக்கிவிடாதே!
எவற்றை எனக்கு அருளவில்லையோ அவற்றை எனக்கு சோதனையாக ஆக்காதே!
யா அல்லாஹ்! எனது புற உருவை நீ அழகாக்கினாய்.அதைப்போன்றே என் அக உருவத்தை-என் குணங்களையும் அழகுமிக்கதாய் ஆக்குவாயாக!
என் உள்ளத்தின் உள்ள வஞ்சகத் தன்மையை நீக்குவாயாக!
எங்களை உயிர் வாழச் செய்யும் காலமெல்லாம் வழிகெடுக்கும் சோதனைகளை விட்டும் எங்களை காத்தருள் ரப்பே!

No comments:

Post a Comment