அல்லாஹ்வே !என் எஜமானே !படைத்தவனே !ரிஜ்க் அளிப்பவனே !மன்னிப்பவனே !
அருட் கொடையாளனே !
நீ தான் என் பாதுகாவலன் !
நீ தான் வணக்கத்துக்குரியவன்
என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!
என்னுடைய தவறுகளை
பொருட்படுத்தாமல்
விட்டுவிடு வாயாக !
குறைவாக இருந்தாலும் உன் மார்க்க சேவையில் ஈடுபட தவ்பீக்
செய்வாயாக !
நீ என்னை படைத்தவன் !நான் படைக்கப்பட்டவன்
நீ ரிஜ்க் அளிப்பவன் ,நான் ரிஜ்க் அளிக்கப்படுபவன்
நீ மன்னிப்பவன் நான் உன்னிடம் மன்னிப்பை தேடுபவன் .
நீ அருட்கொடையாளன் ,
நான் உன்னிடம் யாசிப்பவன்
இந்த ஏழை.உன்னுடைய தர்பாரில் கை யேந்தி நிற்கிறேன்
நாங்கள் எந்த நிலையிலும் நீ மட்டுமே எங்களின் வணக்கத்துக்குரியவன் ,
என உன்னை மட்டுமே
வணங்கிவருபவர்கள்
எங்கள் பாவங்களை மன்னித்து எங்களின் இம்மை மறுமை தேவைகளை நிறைவேற்று வாயாக !
ஆமீன்
No comments:
Post a Comment