Tuesday, 21 March 2017

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.
இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமின் மீது தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் கடமையாவதற்கும், திருட்டு, விபச்சாரம், கொலை மற்றும் மோசடி போன்ற குற்றங்களுக்கான தண்டனை விதிக்கப்படுவதற்கும் இரண்டு நிபந்தனைகள் உண்டு.
ஒன்று, அவன் புத்தி சுவாதீனம் உள்ளவனாக இருக்க வேண்டும்.
அதாவது, பைத்தியக்காரனாகவோ, மூளை வளர்ச்சி குன்றியவனாக இல்லாமல் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிபவனாக இருக்க வேண்டும்.
இரண்டாவது, பாலிஹஃ( major ) ஆனவனாக இருக்க வேண்டும்.
அதாவது, வயதிற்கு வந்தவராக இருக்க வேண்டும்.
பெண்ணாக இருந்தால் அவளுக்கு எப்போது மாதவிடாய் வரத் துவங்கு கிறதோ அப்பொழுது அவள் வயதுக்கு வந்தவராக கருதப்படுவாள்
இது, ஒரு பெண்ணின் குடும்ப பாரம்பரியத்தை பொருத்து, உடல்வாகை பொருத்து, அந்த நாட்டின் சீதோஷ நிலையை பொருத்து, ஒன்பது வயதிலிருந்தே துவங்கலாம்.
ஆணாக இருந்தால், அவனுக்கு எப்பொழுது ஸ்கலிதம் ஏற்படுகிறதோ அப்பொழுது அவன் வயதிற்கு வந்தவனாக கருதப்படுவான்.
இஸ்லாம் ஆண் 15 வயதில் மேஜர் ஆவதாக குறிப்பிடுகிறது.
முறை தவறி ஆண் பெண்ணிடம் உடலுறவு கொண்டாலோ குற்றம் புரிந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கடும் தண்டனை விதிக்கிறது.
அதாவது. அவ்விதம் உறவு கொள்பவர் திருமணம் ஆகாதவராக இருந்தால் 100 கசையடியும் திருமணம் ஆனவராக இருந்தால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
இந்த கடுமையான தண்டனை சில நிபந்தனைகளின் அடிப்படையில் நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.
ஒருவர் தவறான முறையில் உடலுறவு (விபச்சாரம்) செய்தார் என்பதை 4 சாட்சிகள் உறுதிபடுத்த வேண்டும்.
அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் அவர்கள் உடலுறவு ஈடுபடுவதை பார்த்திருக்க வேண்டும்.
அவ்வாறின்றி, நான்கு சாட்சிகள் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் பார்த்ததாக கூறினாலோ அல்லது, அவர்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தார்கள் என்று கூறினாலோ இருவரும் கட்டியணைத்து கொண்டிருந்தார்கள் என்று சொன்னாலோ மேலே குறிப்பிட்ட தண்டனை வழங்கப்பட மாட்டாது.
பாலிஃஹ்ஆகாத அதாவது வயதிற்கு வராத சிறுவனோ சிறுமியோ கொலை திருட்டு கடுமையான முறையில் தாக்குதல் போன்ற குற்ற செயல் செய்தால், அவனை முறையாக வளர்க்காத அவர்களுடைய பொறுப்பாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
என்ன தண்டனை என்பதை காஜி முடிவு செய்வார்.

No comments:

Post a Comment