Wednesday, 15 March 2017

இமாம் ஜஃபர் ஸாதிக் ரழி அவர்களின் துஆ

اَللّـهُمَّ اِنَّهُ لَيْسَ لي عِلْمٌ بِمَوْضِعِ رِزْقي وَاِنَّما اَطْلُبُهُ بِخَطَرات تَخْطُرُ عَلى قَلْبي فَاَجُولُ فى طَلَبِهِ الْبُلْدانَ فَاَنَا فيما اَنَا طالِبٌ كَالْحَيْرانِ لا اَدْري اَفى سَهْل هَوُ اَمْ في جَبَل اَمْ في اَرْض اَمْ في سَماء اَمْ في بَرٍّ اَمْ في بَحْر وَعَلى يَدَيْ مَنْ وَمِنْ قِبَلِ مَنْ وَقَدْ عَلِمْتُ اَنَّ عِلْمَهُ عِنْدَكَ وَاَسْبابَهُ بِيَدِكَ وَاَنْتَ الَّذي تَقْسِمُهُ بِلُطْفِكَ وَتُسَبِّبُهُ بِرَحْمَتِكَ اَللّـهُمَّ فَصَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْ يا رَبِّ رِزْقَكَ لي واسِعاً وَمَطْلَبَهُ سَهْلاً وَمَأخَذَهُ قَريباً وَلا تُعَنِّني بِطَلَبِ ما لَمْ تُقَدِّرْ لي فيهِ رِزْقاً فَاِنَّكَ غَنِىٌّ عَنْ عَذابي وَاَنَا فَقيرٌ اِلى رَحْمَتِكَ فَصَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ وَجُدْ عَلى عَبْدِكَ بِفَضْلِكَ اِنَّكَ ذُو فَضْل عَظيم.

அல்ஹம்துலில்லாஹ்!
யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் என்னுடைய ரிஜ்க் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை .என்னுடைய உள்ளத்தில் தோன்று கின்ற இடங்களிலெல்லாம் தேடிப் பார்க்கிறேன்.அது கடலிலிருக்கிறதா?
கரையிலிருக்கிறதா?
அது வானத்திலிருக்கிறதா?பூமிலிருக்கிறதா? யாரிடமிருக்கிறது ? எந்த திசையிலிருக்கிறது?
எதுவும் எனக்குத் தெரியாது,

     ஆனால் என் ரப்பே!
ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்
ரிஜ்க்கைப் பற்றி ஞானம் உனக்குமட்டுமே தெரியும்
அது உண்டாகும் காரணகாரியங்கள்
உன் கரங்களில் தான் இருக்கின்றன.
நீ தான் உன் கருணாயினால் அதை பங்கீடு செய்கிறாய்.
உன்னுடைய இரக்கமிகு குணத்தால் எங்களுக்கு அது கிடைக்கும் காரண காரியங்களை உருவாக்குகிறாய்.
  என் ரப்பே!
உன்னுடைய ரிஜ்க்கை எனக்கு விசாலமாக அருள்வாயாக!
அது கிடைக்கின்ற வழியை லேசாக்குவாயாக!
அதை அண்மையில் எனக்குக் கிடைக்கச் செய்வாயாக!
எனக்கு விதிக்கப்படாத ரிஜ்கை நான் தேடாமல் என்னைக் காப்பாயாக!
  என் இறைவா!
என்னைத் தண்டிப்பதை விட்டும் நீ தேவையற்றவன்
ஆனால் என் ரப்பே!
உன் கருணையின் பால் நான் மிகவும் தேவையானவன்
நான் செய்த தீய காரியங்களால்
நீ எனக்கு அளிக்க இருக்கும் ரிஜ்க்கைத் தடுத்துவிடாதே!
என்னை மன்னித்து எனக்கு நேர்வழி காட்டு!
உன்னையையே வணங்குகிறேன்
உன்னிடமே அழுது மன்றாடி உதவி கேட்கிறேன்
     என்னுடைய இம்மை மறுமைக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி அருள்புரிவாயாக!
    அல்லாஹும்ம ஸல்லிஅலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

No comments:

Post a Comment