Wednesday, 6 January 2016




நான் மிக அருகே இருக்கிறேன் என சொல்லும் என் இரட்சகனே!

என் உள்ளத்தின் முனங்கல் சத்தத்தை செவிமெடுப்பாயாக!

அதை கேட்கின்ற ஆற்றல் உன்னையன்றி யாரிடமுமில்லை.

என் உள்ளத்தின் கனவுகளை உண்மையாக்குவாயாக!

நீ விதித்ததைக் கொண்டு போதுமாக்கும் மன நிலையை ஏற்படுத்துவாயாக!
என் எதிரிகளும்,என் மேல் பொறாமை கொண்டோரும் என்னை ஏளனம் செய்யும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே என் ரப்பே!
உன்னை மட்டுமே வணங்குகிறேன்
உன்னிடம் மட்டுமே கையேந்தி கேட்கிறேன்

நீயே எனக்கு பாதுகாவலன்.
எல்லாப் புகழும்,நன்றியும் உனக்கே

லகல் ஹம்து வலகஷ்ஷுக்ர் யா அல்லாஹ்

ஆமீன்

No comments:

Post a Comment