Wednesday, 3 March 2021

தேர்வெழுதும் மாணவர்களுக்காக துஆ

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்

யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய். 
(ஆதாரம் : இப்னுஹிப்பான்)

பேனாவின் மூலம் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தவனே! அல்லாஹ்வே!

இன்று தேர்வெழுதும் எங்கள் மாணவச் செல்வங்கள் எவ்வித பதட்டமுமின்றி, நல்ல நினைவாற்றலுடன் தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்வாயாக!

 எங்கள் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் நீண்ட வாழ் நாட்களைப் பெற்று சிறந்து விளங்க தவ்பீக் செய்வாயாக!

பள்ளிக்கும்,கல்லூரிகளுக்கும் செல்லும் எம் பிள்ளைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாப்பாயாக!
கெட்ட நண்பர்களை அணுகாமல் அவர்களை தூரமாக்குவாயாக!

என்றென்றும் எங்களின் கண்குளிர்ச்சியாக அவர்களை ஆக்குவாயாக!
நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் உன்னிடம் இறைஞ்சிய 
  رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌‌ۚ‏ 
“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89
என்ற  பிரார்த்தனையை உன் முன் வைக்கிறோம்.

எங்களில் யாருக்கும் வாரிசுகள் இல்லாமல் தனியாக விட்டுவிடாதே!
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு உன் பெருங்கருணையினால் அவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருள்வாயாக!

எங்களையும்,எங்கள் பிள்ளைகளையும் இம்மையிலும்,மறுமையிலும் இணக்கமாக வாழவைப்பாயாக!
  رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏ 
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40
ஆமீன்

No comments:

Post a Comment