பொறாமைக்காரனே ஆபத்தானவன்
*********************
இப்லீஸ் ,பிர்அவ்ன்
இருவரின் முடிவு
=================
அரபியில் இஸ்ராயிலியத் கதைகள் எனப்படும் இலக்கியம் உண்டு.
பனு இஸ்ரவேலர்கள் தவ்ராதிலும்,இன்ஜீலிலும் இருப்பதாக பல சுவராசியமான பல கதைகளை பரப்பியுள்ளனர்....
நபிபெருமான் ﷺ அவர்கள் அக்கதைகளை உண்மையென்றோ பொய்யென்றோ கூறாதீர்கள் என்றார்கள்.
அக்கதைகளில் ஒன்றுதான் இது .
ஒருநாள் இப்லீஸ் பிர்அவ்ன் வீட்டின் கதவைத் தட்டினான்.
யாரென்றான்" பிர்அவ்ன்
நான்தான் பெரிய கடவுள் என்று சொல்ற
கதவிற்கு இந்தப்பக்கம் இருப்பது யாரென்று தெரியாதா? என்றான் இப்லீஸ்.
இந்த மாதிரி பேசற நீ சபிக்கப்பட்ட இப்லீஸாக த்தான் இருப்ப உள்ளே வா என்றான்
பிர்அவ்ன்.
நீயும் சபிக்கப்பட்டவன் தானே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்
இப்லீஸ்.
பிர்அவ்ன்: ஆமா, ஏன் ஆதம்நபிக்கு ஸஜ்தா செய்ய மறுத்தாய்?
இப்லீஸ் கிண்டலாக,அவரின் முதுகு தண்டில் நீ இருக்கிறாய் எனத் தெரிந்துதான் மறுத்தேன்.
நான்தான் உயரந்த கடவுள் என அகம்பாவம் கொண்டவன் நான், ஆதம்நபியை விட நான் தான் சிறந்தவன் என கர்வம் புடுச்சவன் நீ
நம்மிருவரையும் விட தீயவன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டான் பிர்அவ்ன்.
அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படுபவன் நம்மைவிட மோசமானவன்
ஆபத்தானவன் என்றான் இப்லீஸ்.
ஆமாம்,ஆமாம் என்றான் பிர்அவ்ன்.
---------------------------------------- ---------------------------------
இந்த கதை உண்மையோ,பொய்யோ அதில் சொல்லப்பட்டிருக்கும் பொறாமைக்காரனை பற்றிய செய்தி உண்மை.
தலைக்கனம்மிக்கவனால் ஏற்படும் ஆபத்தைவிட. பொறாமைக்காரனால் ஏற்படும் எதிர்விளைவு மிக ஆபத்தானது
“”உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” (அல்குர்ஆன் 3:119-120)
என குர்ஆன் பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.
‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொளவேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது
தன்னிடமில்லாத சிறப்பான ஒன்று மற்றவர்களிடத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுதான் பொறாமை.
அல்லது தன்னிடம் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
இந்த பொறாமையினால் ஏற்படும் விளைவு என்ன?
பொறாமைக்காரன் தனக்கு கிடைக்காவிட்டாலும் பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் அழிய வேண்டும் என்று விரும்புவான்
பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடை நீங்கி தனக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவான்
பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் போன்று தனக்கும் இருக்க வேண்டும். ஆனால், அவன் தரத்தால் உயர்ந்துவிடக்கூடாது என்று பொறாமைக்காரன் விரும்புவான்
இக்குணம் அவனை பல தவறுகளை செய்ய தூண்டுகோலாகிவிடுகிறது
அதேநேரததில் யாரின் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவருடைய அருட்கொடைகள் நீங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றி அவரைப் போன்றது தனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இது விரும்பத்தக்க நற்குணமாகும். இதற்கு அறபியில் حسدالغبطة என்று சொல்லப்படும்.
இரண்டு விடயங்களில் தவிர பொறாமை கூடாது
– ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான். அவன் அவ்வேதத்தை இரவும் பகலும் ஓதிவருகிறான் இதனை அண்டை வீட்டுக்காரன் கேட்டுவிடுகிறான். அப்போது அம்மனிதன் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவது
இன்னும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவன் சத்தியத்திற்காக – தாராளமாக – செலவு செய்கின்றான். அப்பொழுது ஒரு மனிதன் கூறுகின்றான் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ
நூல் : புகாரி
அல்லாஹ் நம்மனைவரையும் அழிவின் பால் இழுத்துச் செல்லும் பொறாமையிலிருந்து காப்பானாக!
-------கணியூர் நாஜி
*********************
இப்லீஸ் ,பிர்அவ்ன்
இருவரின் முடிவு
=================
அரபியில் இஸ்ராயிலியத் கதைகள் எனப்படும் இலக்கியம் உண்டு.
பனு இஸ்ரவேலர்கள் தவ்ராதிலும்,இன்ஜீலிலும் இருப்பதாக பல சுவராசியமான பல கதைகளை பரப்பியுள்ளனர்....
நபிபெருமான் ﷺ அவர்கள் அக்கதைகளை உண்மையென்றோ பொய்யென்றோ கூறாதீர்கள் என்றார்கள்.
அக்கதைகளில் ஒன்றுதான் இது .
ஒருநாள் இப்லீஸ் பிர்அவ்ன் வீட்டின் கதவைத் தட்டினான்.
யாரென்றான்" பிர்அவ்ன்
நான்தான் பெரிய கடவுள் என்று சொல்ற
கதவிற்கு இந்தப்பக்கம் இருப்பது யாரென்று தெரியாதா? என்றான் இப்லீஸ்.
இந்த மாதிரி பேசற நீ சபிக்கப்பட்ட இப்லீஸாக த்தான் இருப்ப உள்ளே வா என்றான்
பிர்அவ்ன்.
நீயும் சபிக்கப்பட்டவன் தானே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்
இப்லீஸ்.
பிர்அவ்ன்: ஆமா, ஏன் ஆதம்நபிக்கு ஸஜ்தா செய்ய மறுத்தாய்?
இப்லீஸ் கிண்டலாக,அவரின் முதுகு தண்டில் நீ இருக்கிறாய் எனத் தெரிந்துதான் மறுத்தேன்.
நான்தான் உயரந்த கடவுள் என அகம்பாவம் கொண்டவன் நான், ஆதம்நபியை விட நான் தான் சிறந்தவன் என கர்வம் புடுச்சவன் நீ
நம்மிருவரையும் விட தீயவன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டான் பிர்அவ்ன்.
அடுத்தவனைப் பார்த்து பொறாமைப் படுபவன் நம்மைவிட மோசமானவன்
ஆபத்தானவன் என்றான் இப்லீஸ்.
ஆமாம்,ஆமாம் என்றான் பிர்அவ்ன்.
----------------------------------------
இந்த கதை உண்மையோ,பொய்யோ அதில் சொல்லப்பட்டிருக்கும் பொறாமைக்காரனை பற்றிய செய்தி உண்மை.
தலைக்கனம்மிக்கவனால் ஏற்படும் ஆபத்தைவிட. பொறாமைக்காரனால் ஏற்படும் எதிர்விளைவு மிக ஆபத்தானது
“”உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” (அல்குர்ஆன் 3:119-120)
என குர்ஆன் பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.
‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொளவேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது
தன்னிடமில்லாத சிறப்பான ஒன்று மற்றவர்களிடத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுதான் பொறாமை.
அல்லது தன்னிடம் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
இந்த பொறாமையினால் ஏற்படும் விளைவு என்ன?
பொறாமைக்காரன் தனக்கு கிடைக்காவிட்டாலும் பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் அழிய வேண்டும் என்று விரும்புவான்
பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடை நீங்கி தனக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவான்
பொறாமை கொள்ளப்பட்டவனின் அருட்கொடைகள் போன்று தனக்கும் இருக்க வேண்டும். ஆனால், அவன் தரத்தால் உயர்ந்துவிடக்கூடாது என்று பொறாமைக்காரன் விரும்புவான்
இக்குணம் அவனை பல தவறுகளை செய்ய தூண்டுகோலாகிவிடுகிறது
அதேநேரததில் யாரின் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவருடைய அருட்கொடைகள் நீங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றி அவரைப் போன்றது தனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இது விரும்பத்தக்க நற்குணமாகும். இதற்கு அறபியில் حسدالغبطة என்று சொல்லப்படும்.
இரண்டு விடயங்களில் தவிர பொறாமை கூடாது
– ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான். அவன் அவ்வேதத்தை இரவும் பகலும் ஓதிவருகிறான் இதனை அண்டை வீட்டுக்காரன் கேட்டுவிடுகிறான். அப்போது அம்மனிதன் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவது
இன்னும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான். அவன் சத்தியத்திற்காக – தாராளமாக – செலவு செய்கின்றான். அப்பொழுது ஒரு மனிதன் கூறுகின்றான் எனக்கும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்க வேண்டுமே – அவ்வாறு வழங்கப்பட்டால் – நானும் இம்மனிதனைப் போன்று அமல் செய்திருப்பேன் என்று ஆசைப்படுவதாகும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ
நூல் : புகாரி
அல்லாஹ் நம்மனைவரையும் அழிவின் பால் இழுத்துச் செல்லும் பொறாமையிலிருந்து காப்பானாக!
-------கணியூர் நாஜி
No comments:
Post a Comment